தன் நாளை எடுத்து - கடந்துபோன தன் வாழ்நாட்களையெல்லாம் எடுத்தெண்ணி; விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும் - அவற்றுள், போரிற் சிறந்த புண்படாத நாட்களையெல்லாம் வீணாகக் கழித்த நாட்களோடு சேர்ப்பான் தூய பொருநன். விழுப்புண் மார்பிலும் முகத்திலும் பட்ட பெரும் புண். முதுகிற்பட்டது பழிப்புண். பொருநாளாயினும் விழுப்புண் பெறாநாள் வெறுநாளாகக் கருதுவான் என்பதாம். பொருநன் போர்மறவன். விழுப்புண் பெறாநாள் வீணாளாகவே, பெற்றநாள் மாணாள் என்பதாம்.
|