ஓதியுணர்ந்தும் - அடங்கியொழுகுதற் கேதுவான அறநூல்களைக் கற்று அவற்றின் பொருளையும் பயனையும் தெளிவாக அறிந்தும்; பிறர்க்கு உரைத்தும் - அவற்றைப் பிறர்க்கு விளங்க எடுத்துச் சொல்லியும்; தான் அடங்காப் பேதையின் - தான் அவற்றின்படி அடங்கியொழுகாத பேதைபோல; பேதையார் இல் - பேதையார் உலகத்தில் இல்லை. பேதையார் இயல்பாக நல்லதையறியும் ஆற்றலில்லாதார். அறிவு நூல்களைக்கற்று அவற்றால் நல்லதையுணர்ந்ததொடு, அதைப் பிறர்க்கு எடுத்துரைத்தும் தான் அதைக் கடைப்பிடிக்காதவன் இருமடிப்பேதையாதலின், அறியாப் பேதையின் அறிந்த பேதை கடைப்பட்டவன் என்பதை யுணர்த்தற்குப் 'பேதையிற் பேதையாரில்' என்றார்.
|