| 2518. | திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற, திரள் பொன்கைக் குறுங் கண் மலைபோல், குமரர் காமம் முதல் ஆம் முக் குறும்பு அற எறிந்த வினை வால், முனிவனைப் புக்கு இறைஞ்சினர் அருந் தவன் உவந்து புகலும் |
திக்கு உறும் - எட்டுத் திசைகளிலும் பொருந்திய; செறிபரம் - மிகுந்த சுமையை; தெரிய நின்ற - இவ்வளவு என அறியுமாறு தாங்கி நின்ற, திரள் பொன்கை -திரண்ட அழகிய துதிக்கையையும், குறுங்கண் - சிறிய கண்களையும் உடைய; மலைபோல் குமரர் - யானைகள் போன்ற இராமலக்குவர்; புக்கு - அம்முனிவர் உறையுள்புகுந்து; காமம் முதல் ஆம் முக்குறும்பு அற எறிந்த - காமம், வெகுளி, மயக்கம்எனும் மூன்று குற்றங்களையும் அடியோடு கடிந்த; வால் வினை முனிவனை - தவவினை உடையதூய்மையான செயல்களை உடைய அத்திரி முனிவனை; இறைஞ்சினர் - வணங்கினார்கள்;அருந்தவன் - அம்முனிவன்; உவந்து புகலும் - மனமகிழ்ந்து சொல்வான். திக்குறு மலை என்பது எட்டுத் திசைகளிலுள்ளயானைகள். முக்குறும்பு - காமம் வெகுளி மயக்கம். (குறள் 360). அம்மூன்று குற்றங்கள் இல்லாதவன். அ+திரி=அத்திரி, மலை-ஆகுபெயர். புகலும்-செய்யும் என்னும் முற்று ஆண்பாலுக்குவந்தது. வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும் (இராமானுச நூற்றந்தாதி). 2 | 2519. | ‘குமரர்’! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ? அமரர் யாவரொடும், எவ் உலகும் வந்த அளவே! எமரின் யார் தவம் முயன்றவர்கள்?’ என்று உருகினன்- தமர் எலாம் வர, உவந்தனைய தன்மை முனிவன். |
தமர் எலாம் வர உவந்தனைய -தம் சுற்றத்தார் யாவரும் வர அது கண்டு மகிழ்ந்தாற் போல; தன்மை முனிவன் -மகிழ்ச்சி நிலை அடைந்த அத்திரி முனிவர்; (இராமலக்குவரைக் கண்டு); ‘குமரர்! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை - தயரதன் மக்காள்! நீங்கள் இவ் விடத்தில் வந்து பெரும்பேறடையஅருளிய (நீங்கள் இங்கு வந்தது) தன்மை; எளிதோ- (எங்களுக்கு) கிடைத்தற்கு எளியதோ?; அமரர் யாவரொடும் எவ்வுலகும் |