இட்டு என ஓடி - ஊஞ்சல் ஆடுவதுபோல் (போகும்வழி அறியாது) இங்கும் ஆங்குமாக ஓடி; உலைந்து உளை பூசல் இட்ட - வருந்தி வருத்தத்தினாலாகும் பேரொலியை உண்டாக்கினர். மாளிகைகள்முழுவதும் எரிந்து அழிந்ததனால், அந்நகரத்து மக்கள் அச்சத்தால் விரைந்து வெளியேறி ஓடுவதும், தமது பொருளை நினைந்து மீள நகரினுள் வருவதுமாய் இருத்தலால் ‘ஊசல் இட்ட என ஓடி’ எனக் கூறப்பட்டது. ஊசல் இட்டு மகிழ வேண்டிய மாளிகையில் மக்கள் ஊசல் போல அலைந்து திரிந்தனர் என்பது குறிப்பு. ‘புரம்’ என்பது இட ஆகு பெயராய் நின்று நகரத்து மக்களைக் காட்டிற்று. உளை பூசல் - வருந்தி அழைக்கும் கூப்பாடு. (2) மாதர்கள் வருந்தியவகை | 5945. | மணியின்ஆய வயங்கு ஒளி மாளிகை, பிணியின் செஞ்சுடர்க் கற்றை பெருக்கலால், திணி கொள் தீஉற்றது, உற்றில, தேர்கிலார் அணி வளைக் கைநல்லார், அலமந்துளார். |
மணியின் ஆயவயங்கு ஒளி மாளிகை - இரத்தினங்களால் அமைக்கப்பட்ட விளங்குகின்ற ஒளியை உடைய மாளிகைகள்; பிணியின் செஞ்சுடர் கற்றை பெருக்கலால் - தொகுதியாக, செந்நிறமான ஒளியின் திரளை வீசுவதால்; திணி கொள் தீ உற்றது உற்றில தேர்கிலார் - நெருக்கங்கொண்ட நெருப்பு பிடித்த இடத்தையும் பிடியாத இடத்தையும் தெரிந்துகொள்ள முடியாதவர்களாய்; அணிவளைக்கை நல்லார் அலமந்து உளார் -அழகிய வளையல்களை அணிந்த மகளிர்கள் இன்னது செய்வதென்றுஅறியாமல் குழப்பமுற்று வருந்தினர். மாளிகை வீசும் மணி ஒளிக்கும், தீ பரவிய செஞ்சுடர் ஒளிக்கும் வேற்றுமை காணாது, மகளிர்கள் மயங்கி வருந்தினர் என்பது கருத்து. (3) | 5946. | வானகத்தைநெடும் புகை மாய்த்தலால், போன திக்குஅறியாது புலம்பினார்- தேன் அகத்தமலர் பல சிந்திய கானகத்து மயில்அன்ன காட்சியார் |
தேன் அகத்தமலர் பல சிந்திய - தேனைத் தன்னுள்ளேஅடக்கிய பலவகையான மலர்கள் சிதறி விழப்பெற்ற; கானகத்து |