பக்கம் எண் :

பக்கம் : 1268
 
 
2067. கதிநான்குங் கதிசேரும் 1வாயிலுமிவ் விவையிதனால்
விதிமாண்ட 2நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை
மதிமாண்ட நற்காட்சி 3வழிநின்று தவந்தாங்கில்
நிதிமாண்ட பெருஞ்செல்வ 4நீங்காத வியல்பென்றான்.
 
     (இ - ள்.) கதி நான்கும் - பிறப்பின் வகைகள் நான்கும், கதிசேரும் வாயிலும் -
அப்பிறவிகளிலே எய்துதற்கியன்ற காரணங்களும், இவ்விவை - இவைகள் இவைகள் ஆம்
என்று கூறினாம் இதனால் - இங்ஙனம் கூறியவாற்றானே, விதிமாண்ட நரகமும் - ஊழால்
பொருந்திய நரகப் பிறப்பினும், புன் விலங்குகளும் - எளிய விலங்குப் பிறப்பினும் சேராமை
- பிறவாமலுய்யும் பொருட்டு, மதிமாண்ட நற்காட்சி வழிநின்று - அறிவாலே
மாட்சிமைப்பட்ட நற்காட்சியின் பின்னர்த்தாகிய நல்லொழுக்கத்தே நின்று, தவம் தாங்கில் -
தவவொழுக்கத்தை மேற்கொண்ட விடத்தே நிதிமாண்ட பெருஞ் செல்வம் - நிதியாலே
மாட்சிமைப்படுகின்ற பெரிய நுகர்ச்சியாகிய செல்வம், நீங்காத இயல்பு என்றான் - என்றும்
தம்மைவிட்டகலாத இயல்புடைத்தாம் என்று அத்துறவி கூறினான், (எ - று.)

     கதிநான்கும் அவற்றில் எய்துதற்குரிய காரணங்களும் நரகமுதலிய வற்றின் தன்மையும்
கூறிவந்த துறவி அவற்றில் எய்தாமல் உய்ய வேண்டும் எனில் நற்காட்சியுடையராய்த்
தவந்தாங்குதல் வேண்டும் என்றார் என்க.

(956)

 
2068. உறுதிகணன் குரைக்குங்கா லுபசார 5முரைப்பதோ
அறுதியில் 6பே ரருளீரென் 7றரசனாங் கடிதொழலும்
8இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான்
மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன்.
 
     (இ - ள்.) உறுதிகள் நன்கு உரைக்குங்கால் - மக்களுக்குச் சிறந்த உறுதிப்
பொருள்களை எடுத்துரைக்கும் பொழுது, உபசாரம் உரைப்பதோ - முகமனாகக்
கூறுவதேயோ, அறுதி இல் பேர் அருளீர் - முடிவில்லாத பேரருட்பிழம்பாகிய அடிகளே,
என்று அரசன் ஆங்கு அடிதொழலும் - என்று கூறி பயாபதி வேந்தன் அத்துறவியின்
அடிகளிலே வீழ்ந்து வணங்கா நிற்ப, இறுதியில் பேர்இன்பம் எய்தும் ஆறு - முடிவில்லாத
பெரிய வீட்டின்பத்தை எய்தும் வழியையும், எடுத்து உரைத்தான் - எடுத்துக் கூறினான்,
மறுதரவு இல் கதிபடரும் மாதவத்து வரம்பு ஆயோன் - மீளாத நெறியிலே செல்கின்ற
பெரிய தவத்திற்கு எல்லையாய் அமைந்த அத்துறவி, (எ - று.)

     பயாபதி அத்துறவியைத் தொழுது அடிகளே அடியேன் வீடுபெறு தற்குரிய வழியையும்
விளக்கவேண்டும் என்று தொழுதானாக முனிவர் வீடுபேற்றிற்குரிய நெறியை விளக்கப்
புகுந்தார் என்க.
 

(229)

துறவுச் சருக்கம் முற்றிற்று.
 


     (பாடம்) 1வாயிலும்மிவை. 2நரகமும்விலங். 3 தலைநின்று. 4 நீங்காதாலி.
     5.முரைப்பவோ. 6பொருளினரென். 7றரசனடி. தொழலும். 8இறுதியில்.