(இ - ள்.) இன்று இற்றைநாளில், நின்னை முன்வைத்து - உன்னை முன்னிட்டு, இனிச்சில உரைக்கல் வேண்டா - மேலுஞ்சில செய்திகளைக் கூறவேண்டியதில்லை, யான் ஒன்றி உரைக்கல் பால உரையையும் - நான் மணம்பொருந்திச் சொல்லக்கூடிய மொழிகளையும், நியே உணர்தி - நீதானே அறிவாய், வென்றியால், விளங்கு தானை - வெற்றியோடு விளங்குகின்ற படையை உடைய, விஞ்சை அம் கிழவன் - வித்தியாதரர்கட்கு உரிய அரசனான சுவலனசடியை, கண் ஆ நின்று - கண்ணாகக் கொண்டுநின்று, யான வாழ்வது அல்லால் - யான் வாழக்கையை நடத்துவதல்லாமல் நினைப்பு-வேறோர் எண்ணம் இனி இல்லை - இனிமேல் இல்லை, (எ - று.) |