பக்கம் எண் :

பக்கம் : 553
 
 
  ஒன்றிய வுலக மெல்லா மொருங்குடன் விழுங்க லுற்றுச்
சென்றுயர் கடலோ டொக்குஞ் சேனைபண் 1ணமைக்க வென்றான்.
 

      (இ - ள்.) என்று இவர் எண்மர் தம்மை - என்று இன்னணம் புகழப்பட்ட
இவ்வரசர் எண்மரையும் அழைத்து, நீர் - நீயிர், இரதநூபுரத்துள் ஆனா நின்றுகாமின்
என்று - இவ்விரதநூபுரத்துள் இருந்து ஒழியாது இந்நாட்டைக் காவல் செய்யுங்கோள் என்று
பணித்து, நிறீஇயபின் - அவரை அங்ஙனமே அமைத்த பின்னர், நீதிமன்னன் - இரதநூபுரந்
நகரத்தில் வீற்றிருந்த செங்கோல் மன்னன் ஆகிய அச்சடி மன்னன்; ஒன்றிய உலகம்
எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று - பொருந்திய உலகம் முழுவதையும் எஞ்சாமல்
விழுங்குதற்பொருட்டு, சென்று உயர்கடலோடு ஒக்கும் - பெருகிப் படர்ந்து எழுகின்ற
ஊழிக்காலத்துக் கடலையே நிகர்க்கும், சேனை - தன் படைகளை, பண் அமைக்க என்றான்
- ஒப்பனை செய்க என்று கட்டளையிட்டான், (எ - று.)

     என்ற இவ்வெண்மரையும் அழைத்துத் தன் அரசு காவலை அவர் பால் வைத்துக்
காமின் என்று நிறுவிய பின்னர், கடலொடு ஒக்கும் தன் சேனையைப் பண்ணுறுத்துக
என்றான், என்க.
 

( 12 )

களிறு பண்ணுறுத்தல்
839. வெண்ணிலாக் குழவித் திங்கண் மேகத்துப் பதித்த போலும்
ஒண்ணிலா வுருவக் கோட்ட வோடைமால் களிற்றின் மேலோர்
பண்ணெலா மணிந்து தோன்றப் பருமித்துக் கருவி யேற்றிக்
கண்ணிலாம் பதாகை சேர்த்திக் காழகில் கழும விட்டார்.
 

     (இ - ள்.) வெண்ணிலாக் குழவித்திங்கள் - வெள்ளிய நிலாவொளி வீசும் இளம்
பிறையை, மேகத்துப் பதித்தபோலும் - முகிலின்கட் பதித்துவைத்ததைப் போன்ற, ஒண்ணிலா
உருவக் கோட்ட - ஒள்ளிய நிலவொளி வீசும் அழகிய கோடுகளையுடைய, ஓடைமால்
களிற்றின் - முகபடாம் அணிந்த பெரிய யானைகளின், மேலோர் - எருத்தத்தின் மேல்
இருந்து நடத்தும் பாகர்கள், பண் எலாம் அணிந்து தோன்றப் பருமித்து - பண்பாடுகள்
அனைத்தும் அழகுற்றுத் தோன்றுமாறு யானைகளை ஒப்பனை செய்து, கருவியேற்றி -
யானைமேலிருந்து போர்செய்தற்குரிய கருவிகளையும் அங்குசம் கோடரி முதலிய
நடத்தும்கருவிகளையும் அவற்றின் மிசை ஏற்றி, கண்நிலாம் பதாகையேற்றி, காண்பார்
கண்களைத் தம்பாலே நிலவச்செய்யும் 


     (பாடம்) 1. ணமைக.