பக்கம் : 553 | | | | ஒன்றிய வுலக மெல்லா மொருங்குடன் விழுங்க லுற்றுச் சென்றுயர் கடலோ டொக்குஞ் சேனைபண் 1ணமைக்க வென்றான். | (இ - ள்.) என்று இவர் எண்மர் தம்மை - என்று இன்னணம் புகழப்பட்ட இவ்வரசர் எண்மரையும் அழைத்து, நீர் - நீயிர், இரதநூபுரத்துள் ஆனா நின்றுகாமின் என்று - இவ்விரதநூபுரத்துள் இருந்து ஒழியாது இந்நாட்டைக் காவல் செய்யுங்கோள் என்று பணித்து, நிறீஇயபின் - அவரை அங்ஙனமே அமைத்த பின்னர், நீதிமன்னன் - இரதநூபுரந் நகரத்தில் வீற்றிருந்த செங்கோல் மன்னன் ஆகிய அச்சடி மன்னன்; ஒன்றிய உலகம் எல்லாம் ஒருங்குடன் விழுங்கலுற்று - பொருந்திய உலகம் முழுவதையும் எஞ்சாமல் விழுங்குதற்பொருட்டு, சென்று உயர்கடலோடு ஒக்கும் - பெருகிப் படர்ந்து எழுகின்ற ஊழிக்காலத்துக் கடலையே நிகர்க்கும், சேனை - தன் படைகளை, பண் அமைக்க என்றான் - ஒப்பனை செய்க என்று கட்டளையிட்டான், (எ - று.) என்ற இவ்வெண்மரையும் அழைத்துத் தன் அரசு காவலை அவர் பால் வைத்துக் காமின் என்று நிறுவிய பின்னர், கடலொடு ஒக்கும் தன் சேனையைப் பண்ணுறுத்துக என்றான், என்க. | ( 12 ) | களிறு பண்ணுறுத்தல் | 839. | வெண்ணிலாக் குழவித் திங்கண் மேகத்துப் பதித்த போலும் ஒண்ணிலா வுருவக் கோட்ட வோடைமால் களிற்றின் மேலோர் பண்ணெலா மணிந்து தோன்றப் பருமித்துக் கருவி யேற்றிக் கண்ணிலாம் பதாகை சேர்த்திக் காழகில் கழும விட்டார். | (இ - ள்.) வெண்ணிலாக் குழவித்திங்கள் - வெள்ளிய நிலாவொளி வீசும் இளம் பிறையை, மேகத்துப் பதித்தபோலும் - முகிலின்கட் பதித்துவைத்ததைப் போன்ற, ஒண்ணிலா உருவக் கோட்ட - ஒள்ளிய நிலவொளி வீசும் அழகிய கோடுகளையுடைய, ஓடைமால் களிற்றின் - முகபடாம் அணிந்த பெரிய யானைகளின், மேலோர் - எருத்தத்தின் மேல் இருந்து நடத்தும் பாகர்கள், பண் எலாம் அணிந்து தோன்றப் பருமித்து - பண்பாடுகள் அனைத்தும் அழகுற்றுத் தோன்றுமாறு யானைகளை ஒப்பனை செய்து, கருவியேற்றி - யானைமேலிருந்து போர்செய்தற்குரிய கருவிகளையும் அங்குசம் கோடரி முதலிய நடத்தும்கருவிகளையும் அவற்றின் மிசை ஏற்றி, கண்நிலாம் பதாகையேற்றி, காண்பார் கண்களைத் தம்பாலே நிலவச்செய்யும் | |
| (பாடம்) 1. ணமைக. | | |
|
|