பக்கம் : 716 | | வளரல் - மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனாதேகொள், மணங்கள் கமழும் அழகிய பாவையை ஈனுவையாயின், நறுங்குரவே - நறியகுராமரமே நீ, இளையாரால் கணங்களோடு பறிப்புண்டி கண்டாய் - இளமகளிர்களாலே கூட்டத்தோடே வந்து பறிக்கப்படுவாய் காண்; கண்டாய், வாழி: முன்னிலை யசைகள், (எ - று.) குரவம்பூவை, பாவை என்பது மரபு, இளமகளிர்கள் குராமலரைப் பறித்து மகவெனவைத்து ஆட்டயர்தல் மரபு. | ( 302 ) | நங்கை புன்முறுவல் பூத்தல் | 1129. | இன்னண மிளையவர் பாடக் கேட்டலு மன்னவன் மடமகண் முகத்து வாணிலா மின்னியோ ரணிநகை 1முகிழ்த்து மீள்வது கன்னவி றோளவன் கண்கொண் டிட்டவே. | (இ - ள்.) இன்னணம் இளையவர் பாடக் கேட்டலும் - இவ்வாறு அவ்விள மகளிர்கள் இசைபாடுதலைக் கேட்டவுடனே மன்னவன் மடமகள் முகத்து வாள் நிலா மின்னி - சடிமன்னனின் இளமகளாகிய சுயம்பிரரையின் முகத்தே ஒளி நிலாத் தவழ்ந்து, ஓர் அணி நகை முகிழ்த்து மீள்வது - ஓர் அழகிய முறுவல் பூத்து மறைந்ததனை, கல்நவில்தோளவன் கண் கொண்டிட்டவே - கல்லைஒத்த தோளையுடைய திவிட்டநம்பியின் கண்கள் கண்டன, ஏ: அசை, (எ - று.) இவ்வாறு மகளிர் பாடக் கேட்டவுடன், நங்கை முகத்து ஓர் அணி நகை முகிழ்த்து மீள, அதன் நம்பி கண்டனன், என்க. | ( 303 ) | திவிட்டன் தேவியுடன் மாடம் புகுதல் | 1130. | உழையவ ரடிமுதல் பரவ வொண்சுடர்க் குழையவ ளொளி 2கவரக் கோடுயர் மழைதவழ் 3மாலைய மாட மேறினான் முழையம ரரியர சனைய மொய்ம்பினான். | (இ - ள்.) முழைஅமர் அரி அரசு அனைய மொய்ம்பினான் - குகையில் உறைகின்ற அரசசிங்கத்தை ஒத்த வலிமையுடைய திவிட்டன், உழையவர் - உழைக்கலமகளிர்கள், அடி முதல் பரவ - அடிகளிலே வணங்கிப் புகழ, ஒண்சுடர்க் குழையவள் ஒளி - ஒளிசுடரும் தோடணிந்த சுயம்பிரபையின் திருமேனியின் ஒளி, மனம்கவர - தன் மனத்தைக் கொள்ளைகொள்ள, மழை தவழ் மாடம் ஏறினான் - முகில்தவழும் தன்மையுடைய உயர்ந்த மாடமிசையே ஏறுவானாயினான், (எ - று.) அரியரசனைய மொய்ம்பினான், குழையவள் ஒளி மனங்கவர, அவளொடு மாடமேறினான், என்க. ---------- | (304) | எட்டாவது கல்யாணச் சருக்கம் முற்றிற்று. |
| (பாடம்) 1. முகிழ்ப்ப. 2. மணங். 3. மதலைய. | | |
|
|