பக்கம் எண் :


 வைசயந்தன் முத்திச்சருக்கம் 1


 

ஓம்

மேருமந்தர புராணம்

மூலமும் உரையும்

1 - வது : வைசயந்தன் முத்திச்சருக்கம்.

கடவுள் வாழ்த்து.

 1. குற்றங்க ளில்லான் குணத்தானிறைந் தான் குணத்தான்
   மற்றிந்த வைய மளந்தான்வைய நின்ற பெற்றி
   முற்று முரைத்தா னுரையீரொன்ப தாய தொன்றாற்
   செற்றங்கடீர்ப்பான் விமலன்சரண் சென்னி வைத்தேன்.

       (இதன்    பொருள்)    குற்றங்கள்   -    (விபாவமாகிய
இராகத்வேஷமோகங்க     ளென்னும்)    குறைகள்,    இல்லான் -
இல்லாதவனும்,    குணத்தால்    -    (ஸ்வபாவ    குணங்களாகிற
அனந்தஞானாதி)  குணங்களால், நிறைந்தான் - நிறையப் பெற்றவனும்,
குணத்தால் - (அந்த அனந்தஞானாதி)குணங்களால், மற்று - பின்னை,
இந்தவையம்  -  இந்த  உலகத்தை,  அளந்தான் - (பரமாணுவினால்)
அளப்பவனும்,     வையம்    -    இந்தவுலகத்தில்,    நின்ற   -
நிலைபெற்றிராநின்ற, பெற்றி - (ஜீவாதிபதார்த்தங்களினது) தன்மையை,
முற்றும்  -  முழுமையும்,  ஒன்றால்  - (திவ்வியத்துவனி) ஒன்றினால்,
உரை  யீரொன்பதாயது  -  பதினெட்டு  விதமான  பாஷைகளினால்,
உரைத்தான்  -  கூறி அருளியவனும், செற்றங்கள் (தனது பாதத்தைச்
சேர்ந்த  பவ்வியப்  பிராணிகளது)   த்வேஷங்களை,    தீர்ப்பான் -
நீக்குபவனும்,  (ஆகிய)  விமலன்  -  ஸ்ரீ : விமல தீர்த்தங்காருடைய,
சரண் - பாதங்களை,   சென்னி - சிரசில்.   வைத்தேன் - தரித்தேன்,
என்றவாறு.

     இந்த நூலாசிரியர்,  இருபத்துநாலு தீர்த்தங்காருள் பதின்மூன்றாந்
தீர்த்தங்கரராகிய ஸ்ரீ : விமல தீர்த்தங்கரரை மங்களார்த்தமாக முதலில்
ஸ்தோத்திரம்  செய்ததற்குக் காரணம் :- ‘இந்தக் கதா நாயகர்களாகிய
மேரு, மந்தரர்கள், விமல