தீர்த்தங்கரரின் கணதரர்களாதலால்,
முக்கியமாக அந்த விமல
தீர்த்தங்கரரையே ஸ்துதிக்கவேண்டு" மென்பதே. மேரு, மந்தரர்கள்,
யாரெனில், சிம்மசேன மகாராஜனுடைய பத்தினியாகிய இராமதத்தை
மேருவும், பூர்ணசந்திரனென்னும் இரண்டாவது குமாரன் மந்தரனுமாவர்.
அனந்த ஞானாதி குணங்களாவன:- அனந்த ஞானம்,
அனந்த
தர்சனம், அனந்த சுகம், அனந்த வீர்யம் என்பன. பரமாணு என்பது -
அதி சூக்ஷமமும், அவிபாகியுமாகிய அணு.
(1)
அவையடக்கம்.
2. மேதக்க சோதி விலமலன்கணத் துக்கு நாதர்
மாதக்க கீர்த்தி யுயர்மந்தர மேரு நாமர்
போதக் கடலார் புராணப்பொரு ளான்ம னத்தைச்
சோதிக்க லுற்றேன் றமிழாலொன்று சொல்ல லுற்றேன்.
(இ-ள்.) மேதக்க - மேன்மையாகிய,
சோதி - ஜோதியையுடைய,
விமலன் - விமலதீர்த்தங்கரருடைய, கணத்துக்கு -
(த்வாதச)
கணங்களுக்கு, நாதர் - முக்கியர்களாகிய,
மாதக்க -
பெருமைபொருந்திய, கீர்த்தி. - புகழினால், உயர் - மேன்மையாகிய,
மந்தரமேரு நாமர் - மந்தரனென்றும்
மேருவென்றும் பெயருடையவர்களாகிய, போதக்கடலார் -
சுருத ஞானமாகிய
சமுத்திரத்தையுடைவர்களின், புராணப்பொருளால் - புராணமாகிய
பொருளினால், மனத்தை - நூலாசிரியனாகிய
எனது மனதை,
சோதிக்கலுற்றேன் - பரீக்ஷிப்பதற்கு உத்தேசித்தவனாய், தமிழால் -
திராவிட பாஷையினால், ஒன்று - ஒரு காவியத்தை, சொல்லலுற்றேன்
- சொல்லத் தொடங்கினேன். எ-று. (2)
3. மலைபோல நின்று வெயில்வன்பனி மாரி வந்தால்
நிலைபேர்த லில்லார் நிலையின்முன்னெண் ணாது நின்றேன்
கலையா னிறைந்தார் கடந்தகவி மாக் கடலின்
நிலையாது மெண்ணா திதுநீந்துதற் கும்மெ ழுந்தேன்.
(இ-ள்.) வெயில்
- வெயிலாகிய கோடை காலமும், வன் -
கொடுமையாகிய, பனி - பனிக்காலமும், மாரி - மழைக்காலமும்,
(ஆகிய இம்மூன்றும்) வந்தால் - வந்தாலும், மலைபோல நின்று
-
பர்வதம்போல சலியாது நின்று, நிலை - நின்ற
நிலைமையில்,
பேர்தலில்லார் - நீங்குதலில்லாதவர்களாகிய முனிவர்களது, நிலையின்-
கூட்டங்களின், முன் - எதிரில், எண்ணாது
- (இம்முனிமை,"
அதாவது : திரிகால யோகத்தோடு கூடிய துறவு கஷ்டமென்று)
எண்ணாமல், நின்றேன் - நூதனமாக தபசைச்
சேர்ந்திராநின்ற
(இந்நூலாசிரியனாகிய)யான், கலையானிறைந்தார் - ஸாஸ்திரங்களினால்
சம்பூர்ணமாகிய
சுருதகேவலிகளினால், |