பக்கம் எண் :


10மேருமந்தர புராணம்  


 

 19. சாதுரிய மில்லவரு மில்லைமைந்தர் தஞ்சொலு
    மாதுரிய மில்லைவயு மில்லைமற் றவர்செயல்
    போதுரிய மில்லவையு மில்லைபொன் னெயிலிறைக்
    காதரமு மில்லவரு மில்லையந்த நாடெலாம்.

     (இ-ள்.)  அந்தநாடெலாம் - அத்தேச  முழுதிலும்,  மைந்தர் -
புருஷர்களில்,  சாதுரியமில்லவரும் - கல்வித்திறமை யில்லாதவர்களும்,
இல்லை-,  தம்  -  அவர்களுடைய,   சொல்லும்  -  வசனங்களிலும்,
மாதுரியம் - மதுரமாக,  இல்லவையும் - இல்லாதவைகளும்,  இல்லை-,
அவர்செயல்    -    அவர்கள்    செய்கைகளில்,    போதுரியம்  -
காலத்துக்குரியவைகளாய், இல்லவையும் - இல்லாதவைகளும், இல்லை-,
பொன்    -    பொன்னாலாகிய,    எயில்   -   மும்மதில் சூழ்ந்த
சமவசரணத்திலிராநின்ற,  இறைக்கு - அருக  பரமனுக்கு,  ஆதரம்  -
பிரீதியாகிய  அருகத்பக்தி, இல்லவரும்  -  இல்லாதவரும்,  இல்லை-,
எ-று.                                                  (19)

     மற்று  - அசை.  ஆதரமும்  என்பதில்  உம்  -  அசைநிறைப்
பொருளது.

 20. சீலமும் வதங்களுஞ் செறிவுமில் லவரிலை
    காலைமாலை நீதியோடு கல்வியில் லவரிலை
    வேலைமுன்பு நல்லதான மின்றியுண் பவரிலை
    மாலைகாலை மாதவரை வந்தியாரு மில்லையே.

     (இ-ள்.)  சீலமும் - சீலாச்சாரமும்,  வதங்களும் - விரதங்களும்,
செறிவும் - அடக்கமும்,  இல்லவர் - இல்லாதவர்கள், இல்லை-, காலை
- பிராதக்காலத்திலும்,  மாலை  -  மாலைக்காலத்திலும்,  நீதியோடு -
நீதியுடனே,  கல்வி  யில்லவர்  -  வித்தை  ஓதுதல்  இல்லாதவர்கள்,
இல்லை-, வேலை - ஆகார வேளைக்கு, முன்பு - முன்னதாக, நல்ல -
நன்மையாகிய,  தானம் - ஆகாராதி  தானங்களை,  இன்றி - செய்தல்
இல்லாமல்,   உண்பவர்   -   புசிப்பவர்கள்,   இல்லை-,   மாலை -
மாலையிலும், காலை - காலையிலும், மாதவரை - மஹா தபசையுடைய
பரமேஷ்டிகளை, வந்தியாரும் - வணங்காதவர்களும், இல்லை-,  எ-று.

     பரமேஷ்டிகளின் ஸ்வரூபத்தை  பதார்த்த ஸாரமென்னும் நூலில்
30-வது உபயோகாதி காரத்தில் பார்த்துக்கொள்க.              (20)

 21. ஐங்கணைக் கிழவனைக் கடந்தமெய்த் தவரெனும்
    புங்கவர்க் கிறைவனற் சிறப்புமுன் பிலாதன
    மங்கலத் தொழில்களில்லை மானமா யமந்தநா
    டெங்குமில்லை யாவரு மிறைஞ்சிமெய் யொழுகலால்.

     (இ-ள்.)    ஐங்கணைக்கிழவனை    -    பஞ்சபாணங்களுக்கு
முரியவனாகிய    மன்மதனை,    கடந்த   -   ஜெயித்த,   மெய் -
உண்மையையுடைய, தவரெனும் - தபசை