னது, சீர் - குணங்களை, ஓதலானும் - சொல்லி
ஸ்துதிப்பதனாலும்,
கற்புடை பதிவிரதாகுணமுடைய, காமர்
- அழகிய,
வல்லியார்களேபோலும் - புஷ்பக்கொடி போன்ற ஸ்திரீமார்களுக்கு
ஒப்பாகும், எ-று.
(ஊர்கள் என்பது இடவாகு
பெயராய் அதிலுறையும்
மனிதர்களைக் காட்டி நின்றது.)
(16)
வேறு.
17. பாரிலுள்ள வர்க்கெலாம் படுபயன் பொதுவுமாய்
ஏர்மலிந் திடங்களெங்கு மின்பமே பயந்துநல்
வேரிசாந்த மூடுபோகி மேவியாடல் பாடலோடும்
வாரமாதர் போன்ற மாட வூர்கடோறு மாடெலாம்.
(இ-ள்.) மாடம்
- உப்பரிகைகளையுடைய, ஊர்கள்தோறும் -
ஊர்களிலெல்லாம், மாடெலாம் - செல்வங்களெல்லாம்,
பாரில் -
பூமியில், உள்ளவர்க்கெலாம் - இருக்கும் மனிதர்க்கெல்லாம்,
படு -
தம்மில் உண்டாகிய, பயன் - பிரயோசனமானது, பொதுவுமாய்
-
சாமான்யமாகி, இடங்களெங்கும் - எவ்விடங்களிலும்,
ஏர் -
அழகினால், மலிந்து - நிறையப்பட்டு,
இன்பமே பயந்து -
சௌக்கியத்தைக் கொடுத்து, நல் -
நன்மையாகிய, வேரி -
வாசனையையுடைய, சாந்தம் - சந்தனத்தால்
- (அதாவது :
சந்தனக்குழம்பு பூசிக் செய்துகொண்ட அலங்காரத்தாலே), ஊடுபோகி
- நர்த்தன சபையினுட்புகுந்து, மேவி -
(தங்கள் இன்பத்தை
எல்லோருமனுபவிக்கும்படி) சார்ந்து, ஆடல் பாடலோடும் - நர்த்தன
கானங்களோடும், (பொருந்திய) வாரமாதர் போன்ற - வாரவிலாசினி
ஸ்திரீகளை நிகர்த்திருப்பனவாம், எ-று.
(17)
18. சுந்தரத் தலம்மணி சுவர்பளிங்கு செம்பொனா
லந்தரத் தடக்கமா யநேகமாலை நான்றகம்
மைந்தரும் மயிலனாரு மல்குமாட மாளிகை
யிந்திர விமானமிங் கிழிந்திருந்த நீரவே.
(இ-ள்.) சுந்தரத்தலம்
- அழகிய பூமி (கீழிடமானது), மணி -
அரதனம் முத்து முதலிய இரத்தினங்களாகவும், சுவர் - சுவரானது,
பளிங்கு - ஸ்படிகமாகவும், (செய்து) செம்பொனால்
- சிவந்த
பொன்னால், அந்தரத்து - மேலே, அடக்கமாய் - மூடப்பட்டதாகி,
அகம் - உள்ளே, அநேக மாலை - (முத்து, இரத்தினம், பூ, பொன்
முதலியவற்றாலாகிய) பல மாலைகள், நான்று - தொங்கவிடப்பட்டு,
மைந்தரும் - புருடர்களும், மயிலனாரும் -
மயிற்சாயலுடைய
ஸ்திரீகளும், மல்கும் - நிறையும்படி
சமைந்த, மாடம் -
உப்பரிகைகளும், மாளிகை - வீடுகளும், இந்திர
விமானம் -
தேவவிமானம், இங்கு - இவ்விடத்தில், இழிந்திருந்த -
வந்திருந்த
தென்று சொல்லும்படியான, நீர - குணத்தையுடையனவாகும், எ-று. (18) |