பக்கம் எண் :


166மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

 359. .......... குணமறிவு வடிவுகுடிப் பிறப்பு
     பாலங்கையுடை யவர்க்கலது புகழ்ச்சியினி தடையா
     இலங்குமனை யாளும்பொரு ளில்லவிடத் திகழு
     மலங்கல்வரை மார்பபொரு ளாதலினி யழியேல்.

   (இ-ள்.)   அலங்கல் - அசையுமாலையை யணிந்திராநின்ற, வரை
மார்ப  -  விசாலித்த  பர்வதம்  போன்ற மார்பையுடைய குமாரனே!,
குலம் - நல்லகுலமும்,பெரியகுணம் - நற்குணமும்,அறிவு - ஞானமும்,
வடிவு -  நல்லவடிவும், குடிப்பிறப்பு - உயர்குடிப்பிறப்பும், புகழ்ச்சி -
கீர்த்தியும்,    பொலம் -  பொன்னை,  கையுடையவர்க்கு  - கையில்
இருப்பாக (ஸ்திதியாக) உடைத்தானவர்களுக்கு,அல்லது - அல்லாமல்,
இனிது - இனிதாக, அடையா - அடையமாட்டா, பொருள் - திரவியம்,
இல்லவிடத்து  -   இல்லாதவிடத்தில்,   இலங்கு  -  விளங்காநின்ற,
மனையாளும்  -  பெண்சாதியும்,  இகழும்  -  புருஷனை  இகழ்ச்சி
செய்வான்   (மதிக்காள்),   ஆதல்   -   ஆகையினால், பொருள் -
கைவசமாயுள்ள  பொருள்களை,  இனி -  இனிமேல், அழியேல்  - நீ
அழிக்காதே, (என்று சொன்னாள்), எ - று. (3)

 360. காதன்மிகு தாய்மொழியி லாதரமொன் றின்றிப்
     போதரவெ ணாதுபொருண் முழுதுமவ னீயக்
     கோதமெரி போன்றவனைக் கொல்லும்படி சூழ்ந்து
     தீதுதனக் காக்கிமனஞ் சிதைந்தொழுகும் வழிநாள்.

    (இ-ள்.)  (அவ்வாறு சொல்லியும்) காதன்மிகு - வாஞ்சை மிகுந்த,
தாய்மொழியில் - தனது தாயின் சனத்தில், ஆதரமொன்றின்றி - பிரீதி
சிறிதும்  இல்லாமல்,  போதரவு  - (அப்பொருளைக்) காப்பாற்றுதலை,
எணாது -  நினைக்காமல்,  பொருண்முழுதும் - தன்னுடைய  திரவிய
முழுவதையும்,    அவன்  -   அந்தப்    பத்திரமித்திரன்,   ஈய -
இரப்போர்க்குக்    கொடுத்துவிட,    கோதம்  -   குரோதத்தினால்,
(தாயானவள்)  எரிபோன்று  -  அக்கினிக்குச் சமானமாகி, அவனை -
அக்குமாரனை,  கொல்லும்படி  - கொலை செய்யும்படியா, சூழ்ந்து -
நினைத்து,  தீது  - பொல்லாங்காகிய பாககர்மத்தை,  தனக்கு- தனது
ஆத்மனுக்கு, ஆக்கி - உண்டுபண்ணி,மனம் - மனதானது, சிதைந்து -
கெட்டு, ஒழுகும் நாள் வழி - செல்கின்ற காலத்தில், எ - று.

    ‘வழி நாள்? என்பதை,  ‘நாள் வழி?  என மாற்றவேண்டும்; வழி -
இடப்பொருளைக் காட்டும் ஏழனுருபு.

 361. ஆங்கவன்றன் சொன்மறுத்த வழற்சியினும் பொருள்க
     ணீங்கவெழு மார்த்தத்தினு மவ்வுடம்பு நீத்துப்