உளங்கொண்ட வமைச்ச ராதி சூழவந் தூர்கோள் வட்டத்
திளந்திங்க ளாகிப் பூர சந்திர னிருந்திட் டானே.
(இ-ள்.) (அப்படியிருக்கும்போது) இளஞ்சிங்க வேற்றை -
இளமையாகிய ஆண் சிங்கத்தை, சூழ்ந்த - சூழ்ந்திருந்த, இரும் -
பெரிதாகிய, புலிப்போதகம்போல் - புலிக்குட்டிகளைப்போல,
களங்கண்டு - யுத்த களத்தைப் பார்த்து, முழங்கும் - கர்ஜிக்கின்ற,
யானை - யானைகளையுடைய, காவலகுமரர் - பல
தேசத்தரசகுமாரர்கள், வந்து - இவ்விடத்தில் வந்து, சூழ்ந்தார்
சூழ்ந்துகொண்டார்கள், பூரசந்திரன் - பூர்ணசந்திர அரசன்,
உளங்கொண்ட - தன் மனதிற்குச் சரியாய் ஆய்ந்தமைத்துக்கொண்ட,
அமைச்சராதி - மந்திரியர் முதலானவர்கள், சூழக தன்மைச்சூழ,
ஊர்கோள் வட்டத்து - பரிவேடத்தினது வளைவில் உள்ள,
இளந்திங்களாகி - பால சந்திரனுக்குச் சமானமாகி, இருந்திட்டான் -
இருந்தான், எ-று. (87)
வேறு.
444. காமத் திருவின் மஞ்சரியுங் கமலத் திருவுங் கடலமிர்தும்
பூமொய்த் தெழுந்த விளங்கொடியும் புனமென் மயிலு மனையார்கள்
வாமப் புருவச் சிலைகோலி மலர்க்கண்ணம்பு தெரிந்துமனம்
காமக் கோமான் வில்லிகள்போற் கடிதார் மன்னன் புடைசூழ்ந்தார்.
(இ-ள்.) (அச்சமயத்தில்) காமத்திரு - மன்மதனுடைய
செல்வமாகிய ரதிதேவியையும், இன் - இனிய, மஞ்சரியும் -
பூங்கொத்தையும், கமலத்திருவும் - தாமரைப் புஷ்பத்தில் வீற்றிருக்கிற
இலக்ஷ்மி தேவியையும், கடல் - க்ஷீரசமுத்திரத்திலுள்ள, அமிர்தும் -
அமிர்தத்தையும், பூ - புஷ்பங்கள், மொய்த்து - நெருங்கி, எழுந்த -
உண்டாகிய, இளங்கொடியும் - இளமையாகிய புஷ்பக்கொடியையும்,
புனம் - காட்டில் வசிக்கின்ற, மெல் - மிருதுவாகிய, மயிலும் -
மயிலையும், அனையார்கள் - ஒத்த ஸ்திரீமார்கள் வாமம் - அழகு
பொருந்திய, புருவம் - புருவமாகிற, சிலை - வில்லை, கோலி -
வளைத்து, மலர் - நீலோற்பல புஷ்பம் போன்ற, கண் - தங்கள்
கண்களாகிற, அம்பு - பாணங்களை, மனம் - மனதினால், தெரிந்து -
ஆராய்ந்தெடுத்து ஏறிட்டெய்து, காமக்கோமான் - ஆசைக்குத்
தலைவனாகிய மன்மதராஜனது, வில்லிகள்போல் - வில்
வீரர்களைப்போல, கடி - வாசனையையுடைய, தார் -
மாலையையணிந்த, மன்னன் - பூர்ணசந்திர அரசனது, புடை -
பக்கத்தில், சூழ்ந்தார் - சூழ்ந்து கொண்டார்கள், எ-று. (88)
வேறு.
445. பார்த்திபர் தருதிறை கொண்டு பைம்பொனா
லார்த்தியிம் மண்ணினை யமிர்தச் செப்பென
|