வேறு.
560. தீக்கதிச் செலவினை நீக்கிச் சிந்தையின்
நோக்கிலாப் பொருளையு நோக்கி யின்பத்தை
வீக்கியிம் மாற்றினை நீக்கி வீட்டினை
யாக்குநல் லறத்தினை யமர்ந்து செய்மினே.
(இ-ள்.) சிந்தையில் - தியானத்தால், தீக்கதி - துர்க்கதிகளில்
(அதாவது : நாரகதிரியக்குகளில்), செலவினை - செல்லும்படியான
ராகாதி விபாவங்களை, நீக்கி - விலக்கி, நோக்கிலா -
இந்திரியங்களாலறிய முடியாத, பொருளையும், அமூர்த்தமாகிய
ஆத்மாதித்திரவியங்களையும், நோக்கி - (மதிஜ்ஞான ஸ்ரீதஜ்ஞான
பூர்வகமாய் ஸ்வஸம்வேதன பிரத்தியக்ஷ ஞானத்தால்
நிஜாத்மருசிலக்ஷணமாய்ப்) பார்த்து, இன்பத்தை - ஆத்மஸுஹத்தை,
வீக்கி - நிலையாக உண்டுபண்ணி, இம்மாற்றினை - இந்த
ஸம்ஸாரத்தை, நீக்கி - விலக்கி, வீட்டினை - மோக்ஷத்தை, ஆக்கும் -
உண்டாக்கும்படியான, நல்லறத்தினை - நன்மையாகிய ஸ்வதர்ம
ஸ்வரூபமாகிய ரத்தினத்திரயத்தினை, அமர்ந்து - விரும்பி, செய்யுமின்
- யாவரும் செய்யுங்கள், எ-று.
இவ்வாறு கூறியதனால், ஸ்வஸ்வரூப பாவத்தில் (அதாவது :
பரமார்த்த பாரிணாமிகத்தில்) பொருந்துங்கள்; அதுவே பரமோபாதேய
மென்பது பெறப்படும். (107)
ஐந்தாவது :
நால்வரும் சுவர்க்கம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது. |