ஆறாவது
மன்னனுந்தேவியும் மைந்தனுஞ்
சுவர்க்கம்புக்க சருக்கம்
______
561. வெற்றிவேல் வேந்தனும் வேந்தன் றேவியுங்
கொற்றவக் குமரரும் கோவை யெய்தினார்
மற்றிந்த நிலத்திடை வந்து நால்வரு
முற்றன வுரைப்பன்கே ளுரக ராசனே.
(இ-ள்.) உரகராசனே
- தரணேந்திரனே!, வெற்றி
-
ஜயத்தையுடைய வேல் - வேலாயுதத்தைக் கையில் தரித்த, வேந்தனும்
- ஸிம்மஸேன மஹாராஜனும், வேந்தன் - அவ்வரசனுடைய, தேவியும்
- பட்டத்தரசியாகிய இராமதத்தையும், கொற்றவக்குமரரும்
-
இராஜகுமாரர்களாகிய ஸிம்மச்சந்திர பூர்ணசந்திரர்களும்
(ஆகிய
இந்நால்வரும்), கோவை - (தங்களுடைய ஞானபரிணதிக்குத்தக்க
வரிசையாகத்) தேவருலகத்தை, எய்தினார் - அடைந்து
மகர்த்திக
தேவரானார்கள், மற்று - பிறகு, நால்வரும் - அந்த நாலுபேர்களும்,
இந்த நிலத்திடை - இப்பூமியில், வந்து
- வந்து, உற்றன -
அடைந்தவைகளை, உரைப்பன் - சொல்லுவேன், கேள்
- நீ
கேட்பாயாக, எ-று. (1)
562. பாகரப் பிரபனாம் பாவை யாயுகஞ்
சாகரத் துள்ளது பதினை நாளென
நாகரிற் பிரிவெனா நடுங்கிற் றாற்றவும்
பாகரப் பிரபையுட் பாரி சாதமே.
(இ-ள்.) பாகரப்
பிரபனாம் - பாஸ்கரப் பிரபனென்னும்
பெயரையுடைய மஹர்த்திக தேவனாகிய, பாவை
- பூர்வம்
இராமதத்தையாயிருந்த பெண்ணுக்கு, உள்ளது
- உள்ளதான,
ஆயுகம் - ஆயுஷ்யமாகிய, சாகரத்து - பதினாறு கடலில், (மீதி)
பதினைநாளென - பதினைந்து நாள்களென்றிருக்கும்போது, நாகரில்
- தேவர்களினின்றும், பிரிவு - இத்தேவனுக்குப் பிரிவாகும், எனா
-
என்று, பாகரப் பிரபையுள் -
அந்தப் பாஸ்கரப்பிரபை
விமானத்திலிராநின்ற, பாரிசாதம் - கற்பகவிருட்சமானது, ஆற்றவும்
- மிகவும், நடுங்கிற்று - சலித்தது, எ-று. (2)
563. கற்பகஞ் சலிப்பது கண்ட தேவரும்
மற்றவர் சிந்தையு ணடுங்கி வாடினார்
|