கற்பகத் தொடையலுங் கண்ட மாலையும்
பொற்பழிந் தணிகளும் மாசு போர்த்தவே.
(இ-ள்.) (அவ்வாறு) கற்பகம்
- கற்பகவிருட்சமானது, சலிப்பது -
சலிக்கின்றதை, கண்ட - பார்த்த, தேவர் - ஸாமான்ய தேவர்களும்,
மற்றவர் - மற்றுமுள்ள பரிவாரதேவர் தேவியராதியாரும், சிந்தையுள் -
மனதில், நடுங்கி - பயந்து, வாடினார்
- வாட்டமடைந்தார்கள்,
கற்பகத்தொடையலும் - (இந்தப் பாஸ்கரப்பிரனணிந்திருந்த) கற்பகப்
பூமாலையும், கண்டமாலையும் - இவனது கழுத்திலணியப்பட்டிருந்த
கண்டமாலையும், பொற்பழிந்து - அழகழிந்து,
அணிகளும் -
மற்றுமுள்ள ஸஹஜாபரணாதிகளும், மாசுபோர்த்த - களங்கத்தால்
மூடப்பட்டன, (அதாவது : மாசடைந்தன), எ-று. (3)
564. மதியொளி பதினைநா டோறு மாய்ந்திடா
விதியொளி மாசுறிஇ வீயு மாறுபோன்
முதிர்மதி யனையொளி மூர்த்தி மாசுறீக்
கதிர்கழன் றிடுவது கண்டு வாடினான்.
(இ-ள்.) ஒளி -
பிரகாசம் பொருந்திய, மதி - சந்திரன், பதினை
நாடோறும் - (அபரபட்சப்பிரதமை முதல் அமாவாசை பரியந்தமான)
பதினைந்து நாள்கள் தோறும், விதி - கிரமமாக (நாளுக்குநாள்), ஒளி
- கிரணம், மாசுறீஇ - மாசுற்று (அதாவது : ஒளிமழுங்கி), மாய்ந்திடா
- ஒளிகுறையப்பட்டதாகி, வீயு மாறுபோல் - (அமாவாசைத் தினத்தில்
தன்னொளியே யில்லாமல்) தேய்ந்து போவதுபோல்,
முதிர்மதி -
பூர்ணச்சந்திரனை, அனை - நிகர்த்த, ஒளி
- ஜோதியையுடைய,
மூர்த்தி - இந்தப் பாஸ்கரப் பிரபதேவனது சரீரம், மாசுறீ -
களங்க
முற்று, கதிர் - கிரணமானது, கழன்றிடுவது - நீங்கிப்போவதை, கண்டு
- நாளுக்குநாள் தெரிந்து, வாடினான் -
அந்தப் பாஸ்கரப்
பிரபதேவன் வாடுதலடைந்தான், எ-று. (4)
565. தேவனா யமளியைச் செறிந்த நாண்முத
லோவிலா வகையவ னுற்ற வின்பமோர்
தாவமாய்த் திரண்டுவந் தடுவ தொக்குமா
மூவைநா ளகவையின் முடிந்த துன்பமே.
(இ-ள்.) மூவைநாள்
- பதினைந்து நாளாகிய, அகவையின் -
ஆயுகக்கடையில், (அத்தேவனுக்கு) முடிந்த - ஏற்பட்ட, துன்பம் -
மாணாந்திக துக்கமானது, தேவனாய் -
தேவனாகித்தோன்றி,
அமளியை - உபபாதசயனத்தில், செறிந்த - சேர்ந்த, நாள்முதல்
-
அந்நாள் முதலாக, ஓவிலா - நீங்காத, வகை - விதமாய், அவன்
-
அத்தேவன், உற்ற -
இதுவரையில் (அதாவது :
பதினாறுகடலாயுபரியந்யம்) அடைந்த, இன்பம்
- தேவ
சௌக்கியமெல்லாம், ஓர் தாவமாய் - ஒரு காட்டுத் |