பக்கம் எண் :


262மேருமந்தர புராணம்  


 

தீயாகி, திரண்டு வந்து - சேர்ந்து வந்து, அடுவது - சுடுவதை, ஒக்கும்
- நிகர்ப்பதாயிருந்தது, எ-று.                                (5)

வேறு.

 566. சூகர மாகித் தோன்றித் துயருறு முயிர்க டுன்பத்
     தாகர மாகி நின்ற வவ்வுடம் பிடுத லாற்றா
     நாகருக் கிறைவ ராகி விண்ணினை நண்ணி வீழ்வார்
     சோகமுந் துயரு நம்மாற் சொல்லலாம் படிய தொன்றோ.

     (இ-ள்.) சூகரமாகி - பன்றியாகி, தோன்றி - பிறந்து, துயருறும் -
துக்கமடைகின்ற,  உயிர்கள் -  ஜீவர்களும்,  துன்பத்து - துக்கத்துக்கு,
ஆகரமாகி  -  இருப்பிடமாகி,  நின்ற  -  இராநின்ற,  அவ்வுடம்பு -
அச்சரீரத்தை,   இடுதல்   -   விடுவதற்கு,  ஆற்றா   -   தாளாமல்
வருத்தமுடையனவாகும், (அப்படியிருக்க), நாகருக்கு - தேவர்களுக்கு,
இறைவராகி - அதிபர்களாகி, விண்ணினை - தேவலோகத்தை, நண்ணி
- அடைந்து,  வீழ்வார் -  இறந்துபோகின்றவர்களுடைய, சோகமும் -
மனவருத்தத்தையும்,  துயரும் - துக்கத்தையும்,  நம்மால் - நம்மாலே,
சொல்லல்  -  சொல்லுதல்,  ஆம்படியதொன்றோ - ஆகும் விதமான
தொன்றாகுமோ, (சொல்லல் முடியாது), எ-று.                   (6)

 567. கானெரி கவரப் பட்ட கற்பகம் போல வாடி
     வானவ னிருந்த போழ்தின் வந்துசா மான தேவர்
     தேனிவ ரலங்க லாயித் தேவர்தம் முலகிற் சின்னாள்
     வானவ ரிருந்து பின்னை வழுத்தரல் மரபி தென்றார்.

     (இ-ள்.)   (அவ்வாறாகவே)   கான்   எரி  - காட்டுத்  தீயால்,
கவரப்பட்ட   -   கிரகிக்கப்பட்ட,   கற்பகம்   போல   -   கற்பக
விருட்சத்தைப்போல,  வாடி  -  வாடுதலுற்று,  வானவன் - பாஸ்கரப்
பிரபதேவன், இருந்த  போழ்தில் - இருந்த  காலத்தில், சாமானதேவர்
- சாமான்ய தேவர்கள்,  வந்து - இம்மஹர்த்திக தேவனிடத்தில் வந்து,
தேனிவர்    -     வண்டுகள்     விரும்புகின்ற,    அலங்கலாய் -
மாலையையணிந்த   மஹர்த்திக   தேவனே!, இத்தேவர் தம்முலகில் -
இந்தத்   தேவர்   லோகத்திலே,   வானவர் - அவதரித்த தேவர்கள்,
சின்னாளிருந்து   -   தங்களுக்குள்ள   ஆயுஷ்ய  காலமாகிய  சில
நாட்களிருந்து,  பின்னை  -  (ஆயுஷ்ய  பிரமாணம்  முடிந்த) பிறகு,
வழுத்தரல் - இறந்து  போவதாகிய, இது - இச்செய்கை, மரபு - பாரம்
பரிய வரிசையாகும், என்றார் - என்று போதித்தார்கள், எ-று.      (7)

 568. கணங்கணந் தோறும் வேறா முடம்பினைக் கண்டு பின்னு
     மணந்துடன் பிரிந்த வற்றுக் கிரங்குவார் மதியி லாதார்