பக்கம் எண் :


338மேருமந்தர புராணம்  


 

ஞானமும், காட்சி - ஸம்மியக்தரிசனமும், ஓதிய வகையில் - முனிவரன்
சொன்ன   விதமாக,   தோன்ற  -   உத்பன்னமாக,    உலப்பிலா -
கெடுகையில்லாத,     (அதாவது : நிச்சயமாகிய), பொருளை - ஜீவாதி
திரவியங்களை, கண்டான் - யதாஸ்வரூபமாகத் தெளிந்தான், (அதனால்
அப்போது),     ஏதமொன்று   -  யாதொரு குற்றமும், இலாமைக்கு -
இல்லாமையாகிய ஸ்வபாவ குணத்தையடைவதற்கு, ஏது - காரணமாகிய
தவத்தை,   இயற்றுவன் - செய்வேன், என்று - என்று, சொன்னான் -
கிரணவேக மகாராஜன் சொன்னான், எ-று.                   (166)

 727. விரிதிரை வீந்து தோன்றல் வெள்ளம்வெந் துயரம் வேலை
     திரிபுவ னத்தி னெல்லைத் திமிர்கணாற் கதிக ளாசை
     யெரிபுரி வடவை யின்பந் தீபமாற் றாழி நின்றிவ்
     வுரையெனுந் தோணி சித்தி பத்தனத் துய்க்கு மென்றான்.

     (இ-ள்.)     (அவ்வாறு    சொல்லி     மேலும்),  மாற்றாழி -
ஸம்ஸாரமாகிற  சமுத்திரத்தில், வீந்து - இறந்து, தோன்றல் - பிறத்தல்
(அதாவது :  இறந்து   பிறக்கிறதாகிய   இந்த ஜனனமரணமே), விரி -
விசாலித்த,   திரை   -  அலைகளாம், வெம் - வெப்பம் பொருந்திய,
துயரம்   - துக்கமானது,    வெள்ளம் - ஜலப்பிரவாக வருத்தமாகும்,
திரிபுவனத்தின்  -  மூன்றுலோகத்தினுடைய,  எல்லை - முடிவானது,
வேலை   -    கரையாகும், நாற்கதிகள் - சதுர்க்கதிகள், திமிர்கள் -
மேடுகளாகும்,   ஆசை  -  ஆசையானது,  எரிபுரி - உஷ்ணத்தைச்
செய்கின்ற, வடவை - வடவாமுகாக்கினியாகும், இன்பம் - சுகமானது,
தீபம்  - ரத்னதீபம் முதலான தீவுகளுக்குச் சமானமாகும், (ஆதலின்),
நின்று - இப்படிப்பட்ட ஸம்சார சமுத்திரத்திலிருந்து, இவ்வுரையெனும்
- முனிவனால் கூறியருளப்பட்ட இந்தத் தர்ம வசனமென்னும், தோணி
- படகானது,    சித்திபத்தனத்து   -    (தன்னில் ஏறுகின்றவர்களை)
மோட்சமென்னும்   நகரியில், உய்க்கும் - கொண்டுபோய்ச் சேர்க்கும்,
என்றான் - என்றும்    கிரணவேக   மகாராஜன் பாவனை செய்தான்,
எ-று.                                                 (167)

 728. போகமும் பொருளு மெல்லாம் மேகமுந் திரையும் போலும்
     சோகமுந் துயரு மாக்குந் தொடுகடற் சுற்ற மாகும்
     நாகமும் நிலமும் பெற்றால் நாலைந்து நாளில் வேறாம்
     யோகியாய் வினையை வெல்வ னிறைவவென் றுரைசெய் தானே.

     (இ-ள்.) (பின்னரும் அவன் அம்முனிவரை நோக்கி), போகமும்
- போ கோப போகங்களும், பொருளும் - ஐசுவரியாதிகளும், (ஆகிய),
எல்லாம்   -   யாவும்,    மேகமும்    -   ஆகாயத்தில் தோன்றும்
மேகமண்டலமும்,  திரையும் - ஸமுத்திரத்துண்டாகிய அலைகளையும்,
போலும் - நிகர்க்கும், (அதாவது : அவற்றைப்போல சீக்கிரம் அழிந்து
போகப்பட்டனவாகும்), தொடு - சேர்ந்திராநின்ற, சுற்ற