மாகும் - பந்துஜன் ஸமூகங்களாகிற,
கடல் - சமுத்திரமானது,
சோகமும் - வருத்தத்தையும், துயரும் - துக்கங்களையும், ஆக்கும் -
உண்டுபண்ணும், நாகமும் -
தேவருலகமும், நிலமும் -
பூமிராஜ்யாதிகளும், பெற்றால் - அடைந்தாலும் (அவை), நாலைந்து
நாளில் - நாலைந்து தினங்களில் (அதாவது : கொஞ்சக் காலத்தில்),
வேறாம் - நீங்கிவிடும்,
(சம்ஸாரமானது இப்படி
அநித்தியமாயிருப்பதினால்), இறைவ - முனிசிரேஷ்டரே!, யோகியாய்
- நான் தபத்தைக் கைக்கொண்டு மஹா முனியாகி,
வினையை -
கருமங்களை, வெல்வன் -
ஜெயிப்பேன், என்று - என்றும்,
உரைசெய்தான் - சொல்லினான், எ-று. (168)
729. அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பு நான்குந்
திருந்திய குணத்தி னார்க்குச் சேதிக்கு வீதி யாகு
மருந்தவ மரிது சீல மாற்றுவ தாங்கித் தானம்
பொருந்திநற் சிறப்போ டொன்றிப் புரவல செல்க வென்றான்.
(இ-ள்.) (அதுகேட்டு
முனிவரன்) புரவல - அரசனே!, அரும் -
செய்தற் கரிதாகிய, தவம் - தபஸும், தானம் - சதுர்விததானமும்,
சீலம் - சீலாச்சாரமும், அறிவனற் சிறப்பு - ஸர்வஜ்ஞனைக்குறித்துச்
செய்யும் பூஜையும், (ஆகிய), நான்கும் - இந்த நான்கும், திருந்திய -
திருத்தமாகிய, குணத்தினார்க்கு
- ஸம்மியக்துவ
குணத்தையுடையவர்களுக்கு, சேதிக்கு - மோட்சத்திற்கு, வீதியாகும் -
வழியாகும், அரும் - அரிதாகிய, தவம்
- தபமானது, அரிது -
செய்தற்கரியது, (ஆகையால்), சீலம் - சீலாச்சாரங்களில், ஆற்றுவ -
சக்திக்குத் தக்கவாறு பொருந்தியவைகளை
மாத்திரம், தாங்கி -
தரித்து, தானம் - தானங்களையும், பொருந்தி - மனம்பொருந்திப்
பாத்திரங்களில் செய்து, நற்சிறப்போடொன்றி
- அரஹந்த
பரமாத்மாவின் நல்ல நிச்சய குணஸ்துதிகளோடும் சார்ந்து, செல்க -
நீ செல்வாயாக, என்றான் - என்று சொன்னான், எ-று.
(169)
730. அருளிய மூன்று மென்கண் வினையற வெறிந்து வீட்டைத்
தருமெனி லரிய வந்தத் தவத்தினாற் பயனு மில்லை
அரியவத் தவத்தி னன்றிப் பிறப்பினைக் கடக்கொணாதே
லருளிய தென்கொ லென்ன வருந்தவ னமைக வென்றான்.
(இ-ள்.) (அதைக்கேட்டு
மன்னன் முனிவனை நோக்கி), அருளிய
- இப்போது சொல்லியருளப்பட்ட, மூன்றும் - (தவம் நீங்கலாகிய,
சீலம், தானம், பூஜையாகிய) மூன்றும், என்கண் - என்னிடத்தாகிய,
வினையினை - ஸகல கரு மங்களையும், அற - நீங்கும்படியாக,
எறிந்து - கெடுத்து, வீட்டை - மோட்சத்தை,
தருமெனில் - நீர்
பின்னுரைத்தபடி கொடுக்குமென்றால், அரிய - மகா அருமையாகிய,
அந்தத் தவத்தினால் - அத்தபசினால், பயனும் - வரப்பட்ட பலனும்,
|