பக்கம் எண் :


340மேருமந்தர புராணம்  


 

இல்லை   -   அம்மோக்ஷத்திற்கு   மேலானதில்லை, (அப்படியிருக்க
முன்னே தவத்தினால் பிறப்பறுமென்றுஞ் சொன்னீர்; அங்ஙனம்), அரிய
- பெறுதற்கரிதாகிய,   அத்தவத்தினன்றி - அந்தத் தபசினாலல்லாமல்,
பிறப்பினை - ஜனனமாகிற இச்சம்சாரத்தை, கடக்கொணாதேல் - நீங்கி
மோட்சமடைதல்    முடியாதிருக்குமானால், அருளியது - இப்பொழுது
அத்தபம்    வேண்டியதில்லையென்று    எனக்குத்   தாங்கள்  கூறி
அருளியது, என்கொல் - என்ன  காரணம்,   என்ன - என்று கேட்க,
அருந்தவன்    -    அரிதாகிய     தபசையுடைய      முனிவரன்,
(அக்கிரணவேகனை     நோக்கி),    அமைக   -    நீ  தபத்திலே
பொருந்துவாயாக, என்றான் - என்று சொன்னான், எ-று.       (170)

 731. செங்கயற் சருங்கட் செவ்வாய்ச் சீறடிப் பரவை யல்குற்
     கொங்கைகள் வீங்கத் தேய்ந்து நுடங்கிடைக் கொடிய னார்கள்
     வெங்களி யானை வேந்தன் விரதியாந் திருவை மேவ
     வங்கவ னுமிழப் பட்ட தம்பலம் போல வானார்.

     (இ-ள்.) (அவ்வாறு முனிவரன் கூறிய பின்பு),  வெம் - வெப்பம்
பொருந்திய,   களி   -   கெர்வத்தையுடைய, யானை - யானைக்குத்
தலைவனாகிய, வேந்தன் - கிரணவேக மகாராஜன், விரதியாந் திருவை
- வைராக்கியமென்னும்    லட்சுமியை,    மேவ - பொருந்த, செம் -
சிவந்த,    கயல் - கெண்டை   மீன்போன்ற, கரும் - கறுத்த, கண் -
கண்களையும்,    செவ்வாய்    -    சிவந்த     வாயையும், சீறடி -
சிற்றடிகளையும்,    பரவை - விசாலித்த, அல்குல் - அல்குலினையும்,
கொங்கைகள் - ஸ்தனங்கள்,  வீங்க - கதிக்க, (அதனால்), தேய்ந்து -
குறைந்து,     (மெல்லியதாகி),    நுடங்கும்  -  அசைகின்ற, இடை -
இடையையும்,  (உடைய),   கொடியனார்கள்   -   புஷ்பக்கொடிக்குச்
சமானமாகிய    தேவிமார்கள்,    அங்கவன்    -    அவ்விடத்தில்
அவ்வரசனால்,     உமிழப்பட்ட     -     மென்று   வாயினின்றும்
துப்பிவிடப்பட்ட,  தம்பலம் போல - தாம்பூலத்தைப்போல, ஆனார் -
(அவனுக்கு) ஆகினார்கள், எ-று.                           (171)

 732. பருமணி முடியுந் தோடும் பட்டமுங் குழையும் பூணுந்
     தருமணி யாரந் தாம மங்கதஞ் சன்ன வீரம்
     அருவிலைப் பட்டும் விட்ட வரசனால் முனியப் பட்ட
     பரிசனம் போலச் சாயை யிழந்துபோய் வீழ்ந்த வன்றே.

     (இ-ள்.)      (மேலும்     அக்கிரணவேகனால்),     விட்ட -
நீக்கிவிடப்பட்ட,   பரும் - பெருத்த, மணி - இரத்தினத்தாலிழைத்துச்
செய்யப்பட்ட,   முடியும் - கிரீடமும்,     தோடும் - கர்ணத்தோடும்,
பட்டமும் - நெற்றிப்பட்டமும், குழையும் - கர்ண குண்டலமும், பூணும்
- மற்றுமுள்ள    வாபரணங்களும்,   திரு - அழகிய, மணியாரமும் -
முத்தாஹார இரத்தினஹாரங்களும்,   தாமம் - பூமாலை பொன்மாலை
முதலியவைகளும்,    அங்கதம்  - வாகுவலயங்களும், சன்ன வீரம் -
வென்றிமாலையும், அரு