பக்கம் எண் :


 சக்கராயுதன் முத்திச் சருக்கம் 353


Meru Mandirapuranam
 

 755. மழலைக்கிளி தேனமிர்தம் வான்கரும்பு நல்லியாழ்
     குழலொத்தெழு மொழிமதனன் கொடிமயிலஞ் சாய
     லுழையிற்பொலி நோக்கத்துரு வக்கொடியி னோடு
     மழலொத்திடும் வேலவன்றா னமர்ந்தொழுகும் வழிநாள்.

   (இ-ள்.)  கிளி -  கிளிப்பிள்ளையின்  சொல்லையும்,    தேன் -
மதுவையும், அமிர்தம் -  அமிர்தத்தையும்,  வான் - சிறந்த, கரும்பு -
கரும்பையும், நல் -  நன்மையாகிய, யாழ் - வீணையின் நாதத்தையும்,
குழல் - புள்ளாங்குழலினுடைய  தொனியையும்,  ஒத்து - (ஒவ்வொரு
குணங்களால்)   நிகர்த்து,  எழும் -  உண்டாகின்ற,  மழலைமொழி -
மழலைச்     சொல்லையும்,  மதனன் -  மன்மதனுடைய,   கொடி -
துவஜமாகிய    மீனத்தையும்      (அதாவது :   மீனத்தை நிகர்த்த)
கண்களையும்,   மயிலஞ்சாயல் - ஆண் மயில் போன்ற அழகியசரீரச்
சாயலையும்,  உழையில்  -  பெட்டைமானினது பார்வையைப்போல,
பொலி -  விளங்குகின்ற,  நோக்கத்து  -  மருண்ட  பார்வையையும்
(உடைய),   உருவம்   -    ரூபம்   பொருந்திய,  கொடியினோடு -
புஷ்பக்கொடிபோன்ற  அவ்வஸுந்தரியினோடும்,  1அழலொத்திடும் -
அக்கினிபோன்ற, வேலவன்றான் -  வேலாயுதத்தையுடைய அபராஜித
மஹாராஜன்,     அமர்ந்து -   பொருந்தி,   ஒழுகும்   நாள்வழி  -
இல்வாழ்க்கையில்  செல்கின்ற  காலத்தில், எ-று.

      1அழலொத்தெழும் -என்றும் பாடபேதமுண்டு, மதனன் கொடி,
உவமையாகு பெயராய்க்கண்களை யுணர்த்தி நின்றது. (7)

 756. தேசுடைய சீயசந்தன் கேவச்சத்தின் வழுவி
     வாசமுல வுங்குழலி மங்கைதன் வயிற்றுட்
     டூசுபொதி பாவையெனத் தேன்றியவன் மண்ணோர்க்
     காசைகெட வந்ததொரு மாமணிய தானான்.

    (இ-ள்.) தேசுடைய  -  ஒளியையுடைய,  சீயசந்தன்  -  (பூர்வம்
தபோபலத்தால்      அஹமிந்திரலோகத்தில்     தேவனாயவதரித்த
பிரீதிங்கரனென்னும்      அஹமிந்திரனாகிய)       சிம்மச்சந்திரன்,
கேவச்சத்தின் - உபரிமோ பரிமமென்னும்  கிரை வேயகத்தினின்றும்,
வழுவி - ஆயுரவஸானத்து நழுவி, வாசமுலவும் - பரிமளம் வீசுகின்ற,
குழலி - அளகபாரத்தையுடையவளாகிய,  மங்கை  தன்  வயிற்றுள் -
இந்த வஸுந்தரியினுடைய  கருப்பத்தில்,  (அடைந்து),  தூசு பொதி -
வஸ்திரத்தால்   மூடப்பட்ட,  பாவையென  -  சித்திரப்பாவைபோல,
தோன்றி -  அக்கருப்பத்தினின்றும்  புத்திரனாகப்  பிறந்து, அவன் -
அக்குமாரன்,    மண்ணோர்க்கு   -   பூமியிலுள்ள   ஏழைகளுக்கு,
(உண்டாகிய),  ஆசை - பொருளாசையானது, கெட - நீங்கும்படியாக,
வந்தது  -  வரப்பட்டதாகிய,  ஒரு  -  ஒப்பற்ற,  மா  -  பெருமை
பொருந்திய,  மணியதானான் - ஒரு இரத்தினத்துக்குச் சமானமானான், எ-று.