பக்கம் எண் :


352மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ஆனை  மிசை  -   யானையின்மேல்,  வரும் - ஏறி வரும்படியான,
வணிகரவர் - (இப்பர்,  கவிப்பர்,  பெருங்குடியர்  என்னும் மூவகைச்)
சிரேஷ்டிகள் தங்கியிராநின்ற, இடங்கள் - இடங்களாகிய பெருங்கடை
வீதிகள், ஒரு பால் - ஒரு பக்கத்திலேயிருக்கும், எ-று. (4)

 753. கந்தமலர் கந்தம்விழை கைவலவ ரொருபா
     லந்தமிலா வறிவனுறை யாலையங்க ளொருபால்
     வந்துலக மிறைஞ்சமன்ன னிருக்குமிட மொருபா
     லந்தமிலா வின்னவிட மியார்க்குமுரைப் பரிதே.

   (இ-ள்.)கந்த மலர் - வாசனையுள்ள மலர் மாலையையும்,  கந்தம்
- வாசனைப்பொடி   முதலிய   கந்த   வஸ்துக்களையும்,  விழை -
விரும்பிச் செய்கின்ற, கைவலவர் - கைத்தொழிலில் வல்லவர்கள், ஒரு
பால் -  ஒரு  பக்கத்தில்  தங்கியிருப்பார்கள்  (அதாவது : இவர்கள்
குடியிருப்பு ஒரு பக்கத்திலிருக்கும்),  அந்த  மிலாவறிவன் - அனந்த
ஞானத்தையுடைய   ஜினேஸ்வரன்,    உறை   -   தங்கியிராநின்ற,
ஆலயங்கள் -  ஸ்ரீஜிநசைத்யாலங்களானவை,  ஒரு  பால்  -   ஒரு
பக்கத்திலேயிருக்கும், உலகம் வந்து -  உலகத்திலுள்ளவர்கள் வந்து,
இறைஞ்ச - வணங்க,  மன்னன்  -  அரசன்,  இருக்கும்  -   தங்கி
யிருக்கும்படியான, இடம் -  அரண்மனையிடங்கள், ஒரு பால் - ஒரு
பக்கத்திலே யிருக்கும்,   அந்தமிலா -    முடிவில்லாத,    இன்ன -
இத்தன்மையாகிய, இடம் -  இடங்களை,  யார்க்கும் - எவர்களுக்கும்,
உரைப்பரிது - அளவிட்டுச் சொல்லுதல் அரிதாகும், எ-று. (5)

 754. இந்நக ரிதற்கிறைவ னேத்தரிய கீர்த்தி
     மன்னனப ராசிதன் வயப்புலியோ டொப்பா
     னன்னமனை யார்மதன னாண்டகைப்பு யத்தைத்
     துன்னிய வசுந்தரி துளும்பிய நலத்தாள்.

    (இ-ள்.) இந்நகரிதற்கு -  இவ்வித  நகரமாகிய சக்ரபுரமென்னும்
இதற்கு, இறைவன் - இராஜாவானவன்,   ஏத்தரிய  - ஸ்துதித்தற்கரிய,
கீர்த்திமன்னன்  -    புகழ்ச்சிக்குத்  தலைவனாகிய,  அபராசிதன் -
அபராஜித  மஹாராஜனென்பான்,  (இவன் வீரத்தில்), வயம் - வெற்றி
பொருந்திய,  புலியோடு  ஒப்பான்  -  புலிக்கு நிகரானவன், அன்ன
மனையார் -  ஹம்ஸ  பக்ஷிபோன்ற   மிருதுவாகிய நடையையுடைய
ஸ்த்ரீமார்களுக்கு,  மதனன் -  மன்மதன்   போன்றவன், (இத்தகைய)
ஆண்டகை - ஆண்தன்மை  பொருந்திய  அரசனுடைய,  புயத்தை -
தோளை,   துன்னிய -   சேர்ந்திராநின்ற,  துளும்பிய  -  ததும்பிய,
நலத்தாள் -    அழகையுடைய   பட்டத்தரசியானவள்,    வசுந்தரி -
வஸுந்தரியென்னும் பெயருடையவளாகும், எ-று. (6)