அகழுக்கு - மஹாலவண
சமுத்திரமும், மதிலுக்கு -
அதன்
வஜ்ரவேதிகையும், வீதிகளுக்கு - மஹாநதிகளும்,
உப்பரிகையின்
வரிசைகளுக்கு - குலகிரிபர் வதங்களும்,
இராஜ மாளிகைக்கு -
மஹம்மேரு பர்வதமும், உவமையாகச் சொல்லப்பட்டதால், அந்நகரம்
இவைகளை யெல்லாமுடை ஜம்பூத்வீபத்திற்கு
ஒப்பாக வர்ணித்துச்
சொல்லப்பட்டது. (2)
751. தோகையனை யார்கணட மாடுமிட மொருபால்
பாகமதி நுதலியர்கள் பாடுமிட மொருபால்
மேகமென வேகமுடை நாகநிலை யொருபால்
பூகமுத லாயமலி புறம்பணைய தொருபால்.
(இ-ள்.)ஒரு பால் -
அந்நகரத்தில் ஒரு பக்கத்தில்,
தோகை
யனையார்கள் - ஆண்மயிலுக்குச் சமானமாகிய
சரீரச்சாயலையுடைய
நர்த்தனமாதர்கள், நடமாடும் - நர்த்தனமாடும்படியான,
இடம் -
நர்த்தன சாலைகளாகும், ஒரு பால் - மற்றொரு பக்கத்தில்,
பாகமதி -
(பதினைந்தில் மூன்று பாகமாகிய) மூன்றாம் பிறைச்சந்திரன் போன்ற,
நுதலியர்கள் - நெற்றியையுடைய மாதர்கள், பாடும் -
சங்கீதங்களைப்
பாடும்படியான, இடம் - ஸ்தானமாகும், ஒரு
பால் - வேறொரு
பக்கத்தில், மேகமென -
மேகத்தைப்போன்ற, ( அதாவது :
மேகம்போற் கறுப்பு நிறமுடைய), வேகமுடைய -
மிகுதியான கோப
வேகமுடைய, நாக நிலை
- யானை கட்டும்படியான
யானைச்சாலையாகும், ஒரு பால் - மற்றொரு பக்கத்தில்,
பூகமுதலாய
- கமுகு விருட்சம்
முதலாகிய விருட்சங்கள்,
மலி -
நிறைந்திருக்கின்ற, புறம் - நகர பாகியத்தைச்
சார்ந்த, பணையது - மருத நிலமாகும், எ-று. (3)
752. வர்னினைய ளந்துவரும் வாசிநிலை யொருபா
லூனுறையும் வேற்படை யடைக்குமிட மொருபாற்
றேனுலவு கூந்தலவர் திளைக்குந்தெரு வொருபா
லானைமிசை வரும்வணிக ரவரிடங்க ளொருபால்.
(இ-ள்.) வானினை -
ஆகாயத்தை, அளந்து - அடியால்
அளந்து, வரும் - வரும்படியான
வேகமான நடையையுடைய,
(அதாவது : வேகத்தால் ஆகாயத்தில் தாவிச்சென்று
வரக்கூடிய),
வாசி நிலை - குதிரைகள் நிற்கும் சாலையானது, ஒரு பால் - ஒரு
பக்கத்திலே இருக்கும், ஊனுறையும்
- பகைவர் மாம்சம்
தங்கியிருக்கின்ற, வேல் - வேல் முதலாகிய, படை - ஆயுதங்களை,
அடைக்கும் - சேர்த்து வைக்கும், இடம் - ஆயுதச்சாலையானது, ஒரு
பால் - ஒரு பக்கத்திலேயேயிருக்கும்,
தேனுலவு - (மலர்
மாலையிலுள்ள மதுவை யுண்ணுதற்கு
நெருங்கி) வண்டுகள்
உலாவுகின்ற, கூந்தலவர் - அளகபாரத்தையுடைய
பொது மகளிர்,
திளைக்கும் - நெருங்கியிராநின்ற, தெரு - வீதிகள், ஒரு பால் - ஒரு
பக்கத்திலேயிருக்கும்,
|