பக்கம் எண் :


350மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

ஏழாவது :

சக்கராயுதன் முத்திச் சருக்கம்

 749. உலகமெனுந் திருவினிடை யுந்தியெனச் சம்பூத்
     தலநிலவு பரதமலி தருமகண்ட மதனிற்
     புலவர்புகழ் வரியபுரி சக்கர புரமென்
     றுலகுடைய விறைவனுறை நகரமென வுளதே.

   (இ-ள்.)   உலகமெனும் - லோகமென்று சொல்லப்பட்ட, திருவின்
- இலக்ஷுமியினுடைய, இடை - மத்தியில் உள்ள, (அதாவது :மத்தியம
லோகமாகிய    பூமியில்   உள்ள),   உந்தியென   -   நாபிபோல,
(அமைந்திராநின்ற,  சம்பூத்தலம் - ஜம்பூத்வீபமென்னுந்தலத்து, நிலவு
- விளங்காநின்ற,  பரதம் -  பரத  க்ஷேத்திரத்தில்,  மலி - நிறைந்த,
தருமகண்டமதனில்     -      தர்மக்கண்டத்திலே,    புலவர்    -
வித்துவாம்சர்களால்,  புகழ்வரிய  -  வர்ணித்தல்  அரிதாகிய,  புரி -
பட்டணமானது, உலகுடைய -  மூன்றுலோக  ஆட்சியையும் உடைய,
இறைவன் -  ஜீனேந்திரன்,  உறை -  தங்கியிராநின்ற,   நகரமென -
ஸமவஸரணத்தைப்போல, சக்கரபுரமென்று  - சக்கரபுரமென்று பெயர்
கூறப்பட்டு,  உளது  - மஹாலாவண்ணியமாகவும் ஆனந்தகரமாகவும்
உளதாகும், எ-று. (1)

 750. கிடங்குமதி டெருவுகிடை மாளிகையி னொழுங்கு
     நடுவரசன் மாளிகையி னமர்ந்திருந்த நகரம்
     நுடங்குதிரை வேதிகையோ டாறுகுல மலைக
     ணடுவடைந்த மலையுடைய தீபமது வனைத்தே.

    (இ-ள்.)   கிடங்கு   -  ( அப்பட்டணத்தைச்  சூழ்ந்திராநின்ற )
அகழும், மதிள் - சுற்றுமதிலும், தெருவு - (அந்நகரத்தின்) வீதிகளும்,
கிடை     -     நிலையாகிய,      மாளிகையின்    ஒழுங்கும்  -
(அவ்வீதிகளிலிராநின்ற) உப்பரிகையின் வரிசைகளும், நடு - (அந்நகர)
மத்தியில்,   (சேர்ந்திராநின்ற),  அரசன்   மாளிகையின்  -   இராஜ
மாளிகைகளும்     ஆகிய     இவற்றினால்,    அமர்ந்திருந்த   -
பொருந்தியிருந்த,  நகரம் -  அந்நகரமானது,  நுடங்கும்  - ஓயாமல்
அசைகின்ற, திரை -அலைகளையுடைய மஹாலவண சமுத்திரத்தையும்,
வேதிகையோடு -    அந்த     மஹாலவண    சமுத்திரத்தினுடைய
வஜ்ரவேதிகையையும்,  ஆறு  -  மஹா நதிகளையும், குலமலைகள் -
குலகிரி   பர்வதங்களையும்,   நடு   அடைந்த  -  மத்தியிலடைந்த,
மலையுடைய - பர்வதராஜனாகிய மஹாமேரு பர்வதத்தையும் உடைய,
தீபமது - ஜம்பூத்வீபத்தை, அனைத்து - நிகர்த்ததாம், எ-று.