படியாகச் செய்தும், துயரங்கள் பலவும் - இவையல்லாமலும் இன்னும்
அனேகமாகிய துன்பங்களையும், செய்தார் - (இவனுக்குச்)
செய்தார்கள்,
எ-று. (76)
889. பாவைதா னடித்த பந்திற் பாவிதான் புகையைஞ் ஞூற்றை
யோவிலா தெழுந்து வீழ்ந்தைஞ் ஞூறுவில் லுயர்ந்து டம்பாற்
றாவிலாத் துன்ப முற்றான் தன்னிலை தளர்க்கொ ணாத
வாயுவா லாங்குப் பெற்ற வாழிகா லத்தை யெல்லாம்.
(இ-ள்.) (அப்போது), தன்னிலை - தனக்குக் கட்டின
ஆயுஷ்யத்தின் ஸ்திதியை,தளர்க்கொணாத - நடுவில் நீக்கிக் குறைக்க
முடியாத, ஆயுவால் - நரகாயுஷ்யத்தினால், ஆங்கு - அந்த ஏழா
நரகத்தில், பெற்ற - தனக்காயுஷ்ய மாகப்பெற்ற, ஆழி காலத்தை
யெல்லாம் - கடற் காலங்கள் முழுமையும், ஐந்நூறு வில்லுயர்ந்த -
ஐந்நூறு வில்லுன்னதமாகிய, உடம்பால் - சரீரத்தினால், பாவைதான் -
சித்திரப்பாவை போன்ற ஒரு ஸ்த்ரீயினாலே, அடித்த - அடிக்கப்பட்ட,
பந்தில் - பந்தைப்போல், பாவி தான் - மிகுதியான
பாபகர்மத்தையுடைய இந்த நாரகனானவன், புகை யைந்நூற்றை -
ஐந்நூறு யோசனை உன்னதம், ஓவிலாது - இடைவிடாமல், எழுந்து -
நரக பூமியினின்றும் மேலே கிளம்பி, வீழ்ந்து - தலைகீழாக வீழ்ந்து,
தாவிலா -குறையாத, (அதாவது : மிகுதியாகிய), துன்பம் - துக்கத்தை ,
உற்றான் - அடைந்தான், எ-று.
‘ஐந்நூற்றை" என்பதில், ஐ - சாரியை. (77)
890. ஆர்வத்தா லொருவ னானை யாயினா னொருவ னின்ற
வேரத்தா னரகத் தாழ்ந்தான் விளம்பிய விலார்க ளின்ப
பாரத்தை முடியச் சென்றார் பன்னகர்க் கிறைவ பாரா
யார்வசெற் றங்க ளின்றிப் பகைநமக் கில்லை கண்டாய்.
(இ-ள்.) (இவ்வாறு), ஆர்வத்தால் - அப்பிரசஸ்தராக
பரிணதியினால், ஒருவன் - ஸிம்மஸேன மஹாராஜனான ஒருவன்,
ஆனையாயினான் - முதலில் யானையாகப் பிறந்தான், நின்ற -
அவன்பேரில் ஏற்பட்டு நின்ற, வேரத்தால் - த்வேஷபரிணதியினாலே,
ஒருவன் - அவனுடைய மந்திரியாகிய சத்திய கோஷனென்னும்
ஒருவன், நரகத்தாழ்ந்தான் - நரகத்தில் பிறந்து மூழ்கினான், விளம்பிய
- இப்போது சொல்லப்பட்ட ராகத்வேஷ பரிணதிகள், இலார்கள் -
இல்லாதவர்கள் இன்ப பாரத்தை - சௌக்கிய சமூகத்தில், முடிய -
முழுதிலும், சென்றார் - அடைந்தார்கள், பன்னகர்க்கு -
பவணலோகத்து பவணதேவர்களுக்கு, இறைவ - நாதனாகிய
தரணேந்திரனே!, நமக்கு - ஆத்மனாகிய நமக்கு, ஆர்வ
செற்றங்களின்றி - ராகத்வேஷங்களே யல்லாமல், பகை - வேறொரு
பகையானது, இல்லை - உண்டாவதில்லை, பாராய் - இவற்றை நீ
நன்றாக யோஜித்துப்பார்,(என்று ஆதித்யாபதேவன் சொன்னான்), எ-று.
கண்டாய் - அசை. (78)
எட்டாவது :
வச்சிராயுதனணுத்தரம்புக்க சருக்கம் முற்றுப்பெற்றது. |