பக்கம் எண் :


418மேருமந்தர புராணம்  


 

ஒன்பதாவது :

பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம்

891. மந்திரி மன்னன் றம்மின் மாறுமா றாகிக் கீழ்மே
    லிந்திய மைந்து செல்லு மெல்லையை முடியச் சென்றார்
    வந்தவர் தம்மிற் கூடு மளவினின் றிளைய னாய
    மைந்தனுந் தாயு முற்ற மாற்றினி யுரைக்க லுற்றேன்.

     (இ-ள்.) மந்திரி    -    சத்தியகோஷ மந்திரியும், மன்னன் -
ஸிம்மஸேன மகாராஜனும், தம்மில் - தங்களுக்குள், (குணங்களினால்),
மாறு      மாறாகி      -    வேறு   வேறாகி, (அதாவது : ஒருவர்
குணத்திற்கொருவர்    குணம் விரோதமாய் மந்திரி துர்க்குணத்தையும்
இராஜா   நற்குணத்தையும் அடைந்து), கீழ் - (மந்திரியானவன் தனது
குணத்தினால்)    அதோ    லோகத்தில் ஏழா நரகத்திலும், மேல் -
(அரசனானவன்    தனது    குணத்தினால்)   ஊர்த்துவ லோகத்தில்
ஸர்வார்த்த    ஸித்தியும்,    இந்தியமைந்து செல்லும் எல்லையை -
பஞ்சேந்திரிய ஜுவன்களினால் அடையும்படியான கீழ் மேல் பிரமாண
க்ஷேத்திரங்களை,   முடிய   -   முடிவு பெறும்படியாக, சென்றார் -
அடைந்தார்கள்,    அவர்  - அவ்விருவர்களும், வந்து  - மறுபடியும்
மத்திமலோகமாகிய இப்பூமியில் வந்து, தம்மில் - தங்களுக்குள், கூடும்
அளவில் -சேர்கின்றதற்குள், இளையனாய - குமரனாகிய, மைந்தனும் -
பூர்ணச்சந்திர   புதல்வனும், தாயும்      - அவனுடைய    தாயாகிய
இராமதத்தா    தேவியும்,    உற்ற  - அடைந்த, மாற்று - ஸம்ஸாரப்
பிறப்புக்களை,   இனி    -   இனிமேல்,    இன்று   - இப்பொழுது,
உரைக்கலுற்றேன்        - சொல்லத்     தொடங்கினேன்,  (என்று
ஆதித்யாபதேவன் சொன்னான்), எ-று.                       (1)

892. போதொடு தளிர்கள் செற்றிப் பொறிவண்டும் ஞிமிறும் பாடத்
    தாதொடு மதுக்கள் வீயுந் தாதகி யுடைய தீப
    மோதிய புகைக ணானூ றாயிர முள்ள கன்று
    வேதிகை யிரண்டிற் சக்க வாளத்தின் விளங்கு நின்றே.

     (இ-ள்.) போதொடு - புஷ்பங்களோடு, தளிர்கள் - துளிர்களும்,
செற்றி  - நெருங்கி, பொறி - புள்ளிகளையுடைய, வண்டும் - வண்டுக்
கூட்டங்களும்,    ஞிமிறும் - ஞிமிறினங்களும்,   பாட  - இசைபாட,
(அதாவது :   கீதம்போல்    சப்திக்க),  தாதொடு - பூந்தாதுகளோடு,
மதுக்கள்   - தேன் துளிகளும், வீயும் - சொரிகின்ற, தாதகியுடைய -
தாதகி விருட்சங்களை மிகுதியாகவுடைய, தீபம் - தாத