நின்ற, மாதேவியர் - மஹாதேவியர்கள், எண்ணாயிரத்திரட்டி -
பதினாறாயிரம் பெயர்களாவர், வேழமேல் - யானைகளின் மேலே,
திறைகொண்டு - பகுதிப் பணங்கொண்டு வந்து, (கட்டும்படியாக),
எய்தும் - அடைகின்ற, நாடும் - தேசங்களும், மேல் - முன் தேவிமார்
கணக்கில், உரைத்ததாம் - சொல்லப்பட்ட சங்கியையாகிய
பதினாறாயிரமாகும், எ-று. (35)
926. மாலைதண் டமோகம் வாளி கலப்பையும் பலன வாகும்
நாலுநல் லியக்கர் நாலா யிரவர்காப் பியற்றிச் செல்வ
ரேலவார் குழலின் மாதே வியருமெண் ணாயி ரவர்
மேலுலாம் மதியம் போலும் மேனியான் விரும்பப் பட்டார்.
(இ-ள்.) மாலை - மணிமாலையும், தண்டு - தண்டாயுதமும்,
அமோகம் - சக்தி குறைதலில்லாத, வாளி - பாணமும், கலப்பையும் -
ஹலாயுதமும், பலனவாகும் - பல தேவனுடையனவாகும், நாலு -
இந்நாலு இரத்தினங்களையும், நல் - நன்மையாகிய, நாலாயிரவர் -
நாலாயிரம் பெயர்களாகிய, இயக்கர் - யக்ஷதேவர்கள், காப்பு - காவல்,
இயற்றி - செய்து, செல்வர் - செல்வார்கள், (மேலும்), மேல் -
ஆகாயத்தில், உலாம் - உலவுகின்ற, மதியம்போலும் -
சந்திரன்போலும், மேனியான் - வெண்ணிறமான சரீரமுடைய அப்
பலதேவனாலே, விரும்பப்பட்டார் - இச்சிக்கப்பட்டவர்களாகிய, ஏலம்
- மயிர்ச்சாந்தணிந்த, வார் - நீண்ட, குழலின் - அளகத்தையுடைய,
மாதேவியரும் - பெருமை பொருந்திய பட்டத்துத் தேவியரும்,
எண்ணாயிரவர் - எண்ணாயிரம் பெயர்களாவர், எ-று. (36)
927. கந்திலை நாட்டுக் கண்ட மூன்றினிற் காமர் செல்வத்
திந்துவா ணுதலி னாரோ டின்பநீர்க் கடலை யாடி
யந்தரத் திறைவன் போல வண்டுகள் பலவுஞ் சென்றார்
வெந்திறற் களிற்று வேந்தன் விபீடணனன் வியோக மானான்.
(இ-ள்.) கந்திலை நாட்டு - கந்திலா தேசத்திலே, கண்ட
மூன்றினில் - திரிகண்டத்திலேயாகிய, காமர் செல்வத்து - அழகிய
அர்த்த சக்ரவர்த்தி ஸம்பத்தில், (சேர்ந்தவர்களாகி), இந்து - சந்திரன்
போல, வாள் - ஒளிபெற்ற, நுதலினாரோடு -நெற்றியையுடைய
தேவிமார்களோடு, இன்ப நீர்கடலை - சௌக்கியமாகிற நீர் நிறைந்த
சமுத்திரத்தில், ஆடி - மூழ்கி, (அவ்வின்பத்தை யனுபவித்து),
அந்தரத்திறைவன் போல - விண்ணுலகத்தரசனாகிய தேவேந்திரனைப்
போல, (சுகமுற்று), ஆண்டுகள் பலவும் - பல வருஷங்கள் வரையிலும்,
சென்றார் - (இவ்விருவரும்) சென்றார்கள், (பிறகு), வெம் -
வெவ்விதாகிய, திறல் - வலிமையுள்ள களிற்று - யானையையுடைய,
வேந்தன் - அரசனென்னும் வாஸுதேவனாகிய விபிஷணன்,
வியோகமானான் - தேகவியோகமடைந்தான், எ-று.
கடலை - உருபு மயக்கம். (37) |