பக்கம் எண் :


440மேருமந்தர புராணம்  


 

நரகபரியாய   துக்கத்தை     யடைந்தேனேயென்று)   வருத்தமடைய
வேண்டாம்,    மாற்றுதற்கரிய    -    நீக்குதற்கரிய,   துன்பம் - நீ
யடைந்திருக்கிற   இவ்விரண்டாநரக  துன்பம், பெரிதென்று - மிகவும்
பெரியதென்று,  மயங்கவேண்டாம் - நீ பிரமிக்க வேண்டாம், கீழ் கீழ்
நரகத்து    - இதற்குக் கீழே கீழேயுள்ள நரகங்களின், அவ்வியல்பு -
அந்த  ஸ்வபாவத்தை, அறிந்தால் - தெரிந்து கொண்டால், ஆற்றுதற்கு
- இவ்விரண்டாநரக    துன்பம்    சகித்தற்கு,   எளிது - எளிதாகும்,
(அவற்றின் விவரங்களைக் கூறுகின்றேன் கேள்), எ-று.           (6)

936. ஏழுள நரக நாம மிரதனஞ் சக்க வாலு
    வாழிய பங்கந் தூமந் தமந்தமத் தமத்த மாகும்
    பாழியிந் தகங்கள் சேணி பகிணகந் தொகுப்ப வந்த
    வேழினும் புகவெண் பத்து நான்குலக் கங்க ளாமே.

     (இ-ள்.)  ஏழுள - ஏழாயிரா நின்ற, நரகம் - நரகங்களினுடைய,
நாமம் - பெயர்கள், இரதனம் - ரத்னப்பிரபையும், சக்கம் - சர்க்கராப்
பிரபையும், வாலு - வாலுகாப்பிரபையும், ஆழிய - பெரிதாகிய, பங்கம்
- பங்கப்    பிரபையும்,    தூமம் - தூமப் பிரபையும், தமம் - தமப்
பிரபையும்,    தமத்தமத்தமாகும் - தமஸ்தமப் பிரபையுமாகும், பாழி -
பலம்   பொருந்திய,    இந்தகங்கள் -    இந்திரகங்களும், சேணி -
பேஸ்ரீணிபந்தங்களும், பகிணகம் - புஷ்ப பிரகீர்ணங்களும், தொகுப்ப -
சேர்க்க,    வந்த   -    வரப்பட்ட ஸங்கியைகளானவை, ஏழினும் -
ஏழுநரகங்களிலும்,  புக   -  சேர, எண்பத்து நான்கு லக்கங்களாம் -
எண்பத்து நாலு லட்சம் ஆவாஸங்களாகும், எ-று.               (7)

937. ஒன்றுமூன் றைந்து மேழு மொன்பதும் பத்தோ டொன்று
     நின்றமூன் றோடு பத்து நிரையத்துப் புரைகள் மேன்மே
     லொன்றுமூன் றேழு பத்து மொருபத்தே ழிருபத் தீரி
     னின்றமூன் றோடு முப்பா னாழிகீழ் புரைதோ றாயு.

     (இ-ள்.) நிரையத்து - நரகங்களில், புரைகள் - புரைகளானவை,
ஒன்று   - (ஏழா நரகத்தில்) ஒரு புரையும், மூன்று - (ஆறாநரகத்தில்)
மூன்று   புரையும், ஐந்து - (ஐந்தா நரகத்தில்)ஐந்து புரையும், ஏழும் -
(நாலாநரகத்தில்) ஏழுபுரையும், ஒன்பதும் - (மூன்றா நரகத்தில்) ஒன்பது
புரையும் பத்தோடொன்று - (இரண்டா நரகத்தில்) பதினோரு புரையும்,
மூன்றோடு    பத்து   - (முதல்    நரகத்தில்) பதின்மூன்று புரையும்,
மேன்மேல்   - ஒன்றுக்கொன்று மேலே மேலே, நின்ற - இராநின்றன,
கீழ்ப்புரைதோறும்   -    கீழ்     கீழ்ப்   புரைகள்தோறும், ஆயு -
நாரகர்களுடைய உத்கிருஷ்டாயுஷ்யமானது,  ஆழி - கடல்கள், ஒன்று
- (முதல்    நரகத்தில்    கீழ்புரையில்    அதாவது : பதின்மூன்றாம்
புரையிலிராநின்ற    நாரகர்களுக்கு) ஒரு கடலும், மூன்று - (இரண்டா
நரகத்துக் கீழ்ப்புரை நாரகர்களுக்கு) மூன்று