(பின்னர் நீ), இறந்து - மரணமடைந்து, இவ்வேதனை - இப்படிப்பட்ட
துன்பத்தையுடைய, நரகத்து - நரகத்தில், ஆழ்ந்தாய் -
கர்மோதயத்தால் விழுந்து நரகனானாய், யான் - நான், விழு -
பெரிதாகிய, தவத்தில் - தபத்தினாலே, லாந்தம் - லாந்தவ கல்பத்தை,
புக்கேன் - அடைந்தேன், (அவ்வாறடைந்து), ஒதியால் -
எனக்குண்டாகிய அவதிஜ்ஞானத்தால், உன்னை - உன்னை, கண்டு -
தெரிந்து, இங்கு - இவ்விடத்தில், உறுதி - உனக்குறுதியாகும்படியான
தர்மங்களை, உரைக்க - சொல்லும்படி, வந்தேன் - உனது
சமீபமடைந்தேன், எ-று.
இதுவும், அடுத்த செய்யுளும் குளகம். (4)
934. என்றலு மிறந்த மேலைப் பிறவிக ளறிந்திட் டென்னை
வந்துடன் வணங்கி வீழ்ந்து மயங்கினா னவனைத் தேற்றி
இந்திர விபவ மேனு நின்றதொன் றியார்க்கு மில்லை
வெந்துயர் நரகின் வீழா வுயிர்களு மில்லை யென்றேன்.
(இ-ள்.) என்றலும் - என்று யான் சொல்லவும், மேலை -
முன்னாளில், இறந்த - (உண்டாகி) நீங்கப்பட்ட, பிறவிகள் -
பிறப்புக்களை, உணர்ந்திட்டு - (அவன்) பவஸ் மிருதியாலறிந்து, உடன்
- உடனே, வந்து - என் சமீபத்தில் வந்து, என்னை - என்றனை,
வணங்கி - வணங்கினவனாகி, வீழ்ந்து - எனக்கு முன்னே வீழ்ந்து,
மயங்கினான் - மயக்கமடைந்தான், (அப்போது நான்), அவனை -
அந்நாரகனை, தேற்றி - தெளியும்படி செய்து, (அவனை நோக்கி,
நாரகனே!) இந்திர விபவமேனும் - தேவேந்திர வைபவமானாலும்,
நின்றதொன்று - சாசுவதமாக நிற்கப்பட்ட அனுபவமொன்று, யார்க்கும்
- எவர்களுக்கும், இல்லை - இச் சம்ஸாரத்திலில்லை, வெம் - வெப்பம்
பொருந்திய, துயர் துக்கத்தையுடைய, நரகின் - நரகத்திலே, வீழா -
அடையாத், உயிர்களும் - ஜீவன்களும், இல்லை - இச்சம்ஸாரத்தில்
கிடையாது, என்றேன் - என்று சொன்னேன், எ-று. (5)
935. மாற்றிடைச் சுழன்று வாழு முயிர்கட்கு வந்து செல்வந்
தோற்றின தொடரன் மாய்த லியல்புநீ கவல வேண்டா
மாற்றுதற் கரிய துன்பம் பெரிதென்று மயங்க வேண்டா
மாற்றுதற் கெளிது கீழ்கீழ் நரகத்தவ் வியல்ப றிந்தால்
(இ-ள்.) (அவ்வாறு சொல்லி மேலும்), மாற்றிடை - (நரக,
திரியக் மானுஷ தேவரென்னும் சதுர்கதி) சம்ஸாரத்தில், சுழன்று -
பரிப்பிரமித்துச் சுழன்று, வாழும் - வாழுகின்ற, உயிர்கட்கு -
ஜீவன்களுக்கு, செல்வம் - ஐஸ்வரியமானது, வந்து - வந்து, தோற்றின
- உண்டானதாகி, தொடரல் - சேர்ந்திருப்பதும், மாய்தல் - மாய்ந்து
விடுவதும் (அதாவது : நீங்கி விடுவதும்), இயல்பு - இச்சம்ஸாரத்தின்
இயற்கையாகும், (ஆதலின்), நீ - நீ, கவலவேண்டாம் - (முன் மனு
தேவ, பரியாயத்திலிருந்தேனே இப்போது அப்பரியாய ஸம்பத்
சுகங்களைவிட்டு |