சினையில் லெனகாய்ந் தவிரும் பினைநீ
ரணையும் படியா லணையா வடுமே.
(இ-ள்.) கணமும் - (அந்நாரகர்களுக்கு) ஒரு நிமிஷமும்,
இடையின்றி - இடை விடாமல், எழும் - உண்டாகிய, பசியால் -
பசியினால், உணவென்றென - அன்னம் எப்பொழுதுகிடைக்குமென்று
நினைத்த வளவில், உலகத்துள - அந்நரக லோகத்திலுள்ள, நஞ்சு -
விஷ ஸ்கந்தங்களெல்லாம், வந்து - அவர்களிடத்தில் வந்து,
இணையில்லென - இதற்கு நிகரில்லை யென்று சொல்லும்படி, காய்ந்த
- கருமான் உலையில் வெந்த, இரும்பினை - இரும்பினை, நீர் -
ஜலமானது, அணையும் படியால் - சேர்ந்து ஏகமயமாவது போல்,
அணையா - சரீரத்திற் செறிந்து, அடும் - துன்பஞ் செய்யா நிற்கும்,
எ-று. (15)
வேறு.
945. மேருநே ரிருப்பு வட்டை யிட்டவக் கணத்தி னுள்ளே
நீரென வுருக்குஞ் சீத வெப்பங்க ணின்ற கீழ்மே
லார்வமி லறிவன் றந்த நூலினைந் தாவ தன்னிற்
கார்முகில் வண்ண சீத வெப்பங்க ணின்ற கண்டாய்.
(இ-ள்.) கார்முகில் வண்ண - கரிய மேகம்போன்ற நிறமுடைய
நாரகனே!, மேருநேர் - மஹாமேரு பர்வதத்திற்குச் சமானமாகிய,
இருப்பு வட்டை - இரும்புக்குண்டை, இட்டவக்கணத்தினுள்ளே
அந்நரக பூமியில் இட்டஸமயத்திலே, நீரென - அது ஜலமாகும்படி,
உருக்கும் - உருக்கும்படியான, சீதம் - சீதாவாஸங்களும், வெப்பங்கள்
- உஷ்ணாவாஸங்களும், கீழ்மேல் - கீழ் மேலாக (அதாவது : கீழில்
சீதாவஸங்களும் மேல் நரகங்களில் உஷ்ணாவாஸங்களும்), நின்ற -
நிலைபெற்றிருக்கின்றன, ஆர்வமில் - ராகமில்லாத (வீதராகனாகிய),
அறிவன் - கேவல ஞானத்தையுடைய ஸர்வஜ்ஞன், தந்த - தெரிவித்த,
நூலின் - பரமாகமத்திலே, (கூறியபடி) ஐந்தாவதன்னில் - ஐந்தா
நரத்திலே, சீதவெப்பங்கள் - சீதாவாஸங்கள் உஷ்ணாவாஸங்கள்
இரண்டும், நின்ற - நிலைபெற்றிருக்கின்றன, எ-று.
ஐந்தாநரகத்திலே மேலே மூன்று புரையிலும் அதற்கு மேல்,
நாலு, மூன்று, இரண்டு, ஒன்றுமாகிய நரகங்களில் உஷ்ணாவாஸமும்,
அந்த ஐந்தாவது நரகத்திலே கீழ் இரண்டு புரையிலும், ஆறா
நரகத்திலும், ஏழாவது நரகத்திலும் சீதாவாஸங்களுமாகும்.
கண்டாய் - அசை. (16)
946. வேண்டிய வதற்கு மாறா விகுவணை யெட்டு மெய்யின்
மாண்பில தோன்று நம்மை மாறுமுன் செய்ய வந்தங் |