கீண்டிய பாவத் தாலேழ் நரகத்து மிரட்டிக் கீழ்க்கீழ்
மூண்டதீ மறுகித் தீமை முறுகுந்தீ வினைகளாலே.
(இ-ள்.) வேண்டியவதற்கு - நாரகர்கள் தங்களால்
இச்சிக்கப்பட்ட விஷயத்திற்கு, மாறா - மாறுபாடாய், விகுவணை
யெட்டு - எட்டுப்பிரகாரமான விகுர்வணைகள், மெய்யில் -
அவர்களுடைய சரீரத்தில், மாண்பில - மாட்சிமையில்லாதனவாக,
தோன்றும் - ஏற்படும், நம்மை - ஆத்மனாகிய நம்மை, முன் - முன்
சன்மத்தில், மாறு செய்ய - மாறுபாடாக மறைவைச் செய்ய (அதாவது :
மாய்கையைச் செய்ய), வந்து - (அப்படிப்பட்ட மோஹனீயராகத்வேஷ
பரிணத பாவ பாபகர் மத்தினால் ஆத்மனிடத்தில்) வந்து, அங்கு -
அவ்வாத்ம பிரதேச பரிஸ்பந்தமாகிய அவ்விடத்தில், ஈண்டிய -
சேர்ந்திராநின்ற, பாவத்தால் - திரவிய பாபகர்மத்தினால், ஏழ்
நரகத்தும் - இவ்வேழு நரகங்களுள்ளும், கீழ் கீழ் - ஒன்றுக்கொன்று
கீழே கீழே யிருக்கப்பட்ட நரகங்களில், இரட்டி - இரட்டித்ததாகி,
மூண்ட - மூளப்பட்ட, தீ - அக்கினியினாலே, மறுகி - வருந்த,
தீவினைகளாலே - துஷ்கர் மோதயத்தால் ஆகிய துன்பங்களினால்,
தீமை - கொடுமையானது, முறுகும் - அதிகரிக்கும், எ-று. (17)
947. இயல்பினாந் துன்ப மென்று மேழ்நர கத்து நீங்கா
மயரிகள் செய்வ வெல்லாம் வந்துவந் துற்று நீங்கும்
புயலுறு தடக்கை வேந்தே புலசுதேன் கள்ளை யுண்டா
ருயலுறா வகையிற் செம்பை யுருக்கிவாய் பெய்கின் றாரே
(இ-ள்.) புயலுறு தடக்கை வேந்தே - மேகத்தை நிகர்த்த
(அதாவது : மேகம் போல கொடுக்கும்) கையை முன்
சன்மத்திலுடைத்தாகிய விபீஷண னென்னும் அரசனாகிய
நாரகனே!, ஏழ் நரகத்தும் - ஏழு நரகங்களிலும், இயல்பினாம் -
ஸ்வபாவத்தினாலாகிய, துன்பம் - (எழுந்து விழுதலாகிய) துக்கம்,
என்றும் - எப்பொழுதும் (அதாவது : ஆயுஷ்ய பரியந்தம்),
நீங்கா - நீங்காத, மயரிகள் - அஜ்ஞானிகளாகிய நாரகர்கள்,
செய்வவெல்லாம் - ஒருவருக்கொருவர் கலஹமிட்டுச்
செய்கின்ற துக்கங்களெல்லாம், வந்துவந்துற்று - வந்தடைந்து
வந்தடைந்து, நீங்கும் - நீங்கி நீங்கியுண்டாகும், புலசுதேன்
கள்ளையுண்டார் - (பூர்வசென்மத்தில்,) மாமிசம் மது கள்ளாகிய
இவைகளை உண்டவர்களை, (இந்நரகங்களில்), உயலுறாவகையில்
- பிழைக்க முடியாத வகையால், (புராதன நாரகர்கள்), செம்பை
- செம்பை, உருக்கி - ஜலமாக உருக்கி, வாய் - நூதன
நாரகனுடைய வாயில், பெய்கின்றார் - கொடிறுகளால்
ஊற்றுகின்றார்கள், எ-று. (18)
948. அறமறி வடக்க மாண்மை குடிப்பிறப் பழிய வன்பிற்
பிறர்மனை நலத்திற் சேர்ந்தார் பேரழற் குட்டந் தன்னின் |