பக்கம் எண் :


 நிரையத்துளறவுரைச்சருக்கம் 455


 

னுடைய  கையிலும்,  நஞ்சில் - விஷ ஸமூகத்திலும், சூழெரியகத்தில் -
சூழ்ந்து   எரிகின்ற    அக்னியினது    மத்தியிலும்,      போரில் -
யுத்தரங்கத்திலும்,   சுறா    - மகர மத்ஸயங்களால், எறி - எறிகின்ற,
கடலில்     -    ஸமுத்திரத்திலும்,    கானில் - காட்டிலும், (ஆகிய
இவ்விடங்களிலெல்லாம்),  நீள் பெரிதாகிய, அரணாகி - ஆத்மனுக்குச்
சகாயமாகி,    நிற்கும்   -     நீங்காமல் நிற்கின்றதும், நிரையத்து -
நரகங்களிலே,  விழாமல் - விழவொட்டாமல்,    காக்கும்   - காத்து
ரக்ஷிக்கும்படியானதுமாகிய,    அறத்தைப்போலும் - தர்மத்தைப்போல,
கிடைப்பது    -     சேரப்பட்டதாகி ரக்ஷிக்கின்ற பொருள், ஒன்று -
வேறொன்றும், இல்லை - இவ்வுலகத்திலில்லை, (ஆகையால் நாரகனே!)
இனி   -  இனிமேல், (அந்த தர்ம ஸ்வரூபத்தை), கேள் - உறுதியாகக்
கேட்கக்கடவாய், எ-று.

     கண்டாய் - அசை.                                  (38)

968. உம்பர்தம் முலகி னுய்க்கு முலகினுக் கிறைமை யாக்கும்
    வெம்பிய பிறப்பின் வாங்கி வீட்டின்கண் வைக்கு மெய்யே
    நம்பிநல் லறத்தைப் போலுந் துணையில்லை நமக்கு நாடின்
    கம்பமி னிலைமை யாகித் திருவறங் கைக்கொ ளென்றேன்.

     (இ-ள்.) (மேற்கூறிய அறமானது), உம்பர்தம் - தேவர்களுடைய,
உலகில்     -    உலகமாகிய    ஊர்த்துவ லோகத்தில், உய்க்கும் -
அடைவித்துப்    புண்ணிய     பலன்களைக்        கொடுக்கும் -
(அதுவல்லாமலும்),    உலகினுக்கு    -   இம்மூன்று லோகத்துக்கும்,
இறைமைய க்கும் -   ஆதிபத்தியமாகுந்      தன்மையான அரஹந்த
பதவியையும் செய்விக்கும், வெம்பிய - வெதும்பும்படியான, பிறப்பின் -
இச்சம்ஸாரத்தில்  பிறக்குந்   தன்மையினின்றும்,   வாங்கி - விலக்கி,
வீட்டின்கண்   - மோட்சத்திலே, மெய் - யாதாத்மியமாக (அதாவது :
துருவமாக),   வைக்கும் - ஸ்தாபிக்கும், நம்பி - தம்பியே !. நாடின் -
ஆராயுமிடத்தில், நமக்கு - ஆத்மனாகிய நமக்கு, நல் - நன்மையாகிய,
அறத்தைப்போலும்     - தர்மத்தைப்போல, துணை - ரக்ஷணையாகும்
பொருள்,   இல்லை   - வேறொன்றில்லை, (ஆகையால்), கம்பமில் -
சலனமில்லாத,   கொள் -    சேர்வாயாக,    என்றேன்    - என்று
ஆதித்யாபதேவனாகிய யான் சொன்னேன், எ-று.              (39)

969. என்றலு மிறப்ப வென்க ணலத்துவிந் நிலத்து வந்தின்
    றொன்றலா வுறுதி சொன்னீ ரும்மொழி வழிநில் லேனே
    னின்றன னென்று மிந்த நிரையத்து நீங்க லின்றி
    யென்றவ னிறைஞ்ச நன்றென் றியானென துலகம் புக்கேன்.

     (இ-ள்.)   என்றலும்   - என்று  யான் சொல்லவும், இறப்ப -
மிகவும்,    என்    கண்   - என்னிடத்தில், நலத்து - நன்மையாகித்
தங்களுக்குண்டாகிய ஆசையி