கனைகழ லரசன் றன்மேற் கறுவினாற் பிறவி தோறும்
நினைவிலேன் செய்த தீமை நீங்குமா றருளு கென்றான்.
(இ-ள்.) இனையன - இத்தன்மையான பவவரிசைகளை, கேட்டு
- (ஆதித்தியாபதேவன் மேற் கூறியபடி) சொல்லக் கேட்டு, அந்த
வித்துத்தந்தன் - அவ் வித்தியுத்தம்ஷ்ட்ரன், தன்னை யிழித்து -
ஆத்ம நிந்தனைபண்ணி, மனமலி - மனத்தில் மிகுந்த, கறுவு -
த்வேஷ பரிணதியானது, நீங்கி - விலகி, வானவன் தன்னை - அந்த
ஆதித்யாப தேவனை, வாழ்த்தி - ஸ்தோத்திரம் பண்ணி, கனை -
சப்தியாநின்ற, கழல் - வீரகண்டயத்தை யணிந்த, அரசன் தன்மேல் -
ஸிம்மஸேன மஹாராஜன் மேலே, கறுவினால் - த்வேஷத்தினால்,
பிறவிதோறும் - பவம்பவந்தோறும், நினைவிலேன் - ஆத்மத்தியான
மில்லாத அஞ்ஞானியாகிய என்னால், செய்த - செய்யப்பட்ட, தீமை -
பொல்லாங்குகள், நீங்குமாறு - நீங்கும் விதத்தை, அருளுக - எனக்கு
உபதேசித்தருளுக, என்றான் - என்று சொன்னான், எ-று. (39)
1009. இறைவனா யுலக மேத்த விருந்தசஞ் சயந்தன் பாதம்
நறையுலா மலர்க டூவி வணங்கென நமோவென் றேத்தி
யறிவிலேன் செய்த தீமை பொறுக்கவென் றவுணன் போனான்
உறுதிநின் றுரைத்த வானோ னுவந்துதன் னுலகம் புக்கான்.
(இ-ள்.) (அதுகேட்டு ஆதித்யாபதேவன் அவனை நோக்கி),
இறைவனாய் - நாதனாகிய, உலகம் - இம்மூன்றுலகத்துள்ள
பவ்வியர்கள், ஏத்த - துதிசெய்ய, இருந்த - இராநின்ற, சஞ்சயந்தன் -
இச்சஞ்சயந்த பட்டாரகருடைய, பாதம் - பாதங்களை, வணங்கென -
வணங்குவாயாகவென்று சொல்ல, (அவ்வித்துத்தந்தன்), நறையுலாம் -
வாசனை வீசுகின்ற, மலர்கள் தூவி - மலர்களை அவருடைய
பாதங்களிற் சொரிந்து, நமோவென்று - நமோஸ்து நமோஸ்து என்று,
ஏத்தி -அவரை ஸ்துதி செய்து வணங்கி, அறிவிலேன் - புத்தியில்லாத
என்னால், செய்த - செய்யப்பட்ட, தீமை - பொல்லாங்குகளை,
பொறுக்க வென்று - க்ஷமை செய்வீராகவென்று, அவுணன் -
அவ்வித்தியாதரன், போனான் - தனதிடம் சென்றான், நின்று -
அவ்விடத்தில் நின்று, உறுதி - அவனுக்குறுதியாகிய தர்மங்களை,
உரைத்த - சொல்லின, வானோன் - ஆதித்யாபதேவன், உவந்து -
ஸந்தோஷித்து, தன்னுலகம் - தனது வாசஸ்தலமாகிய லாந்தவ
கல்பத்தை, புக்கான் - அடைந்தான், எ-று. (40)
1010. கறுவினா லொருவ னென்றுங் கடுநவை நரகி னாழ்ந்தான்
பொறையினா லொருவன் புத்தே ளுலகெய்தி வீடு புக்கான்
கறுவொடு பொறையி னாய பயனிவை கண்டு பின்னும்
பொறையொடு செறிவி லாதார் புல்லறி வாள ரன்றே. |