1017. மகரவே றிரண்டு தோளால் வாரியுட் டிரிவ தேபோற்
சிகரமால் யானை யானத் தேவிமார் புயங்க ளாக
நிகரிலா வின்ப வெள்ளக் கடலிடை நீந்து நாளுட்
புகரிலார் வானின் வந்திவ் விருவர்க்கும் புதல்வ
ரானார்.
(இ-ள்.) மகரவேறு - ஆண்மகரமஸ்யமானது,
இரண்டு தோளால்
- கைகளுக்கொப்பாகி இரண்டு பக்கத்துமுள்ள
செட்டைகளால்,
வாரியுள் - சமுத்திரத்துள், திரிவதேபோல் - நீந்தித்
திரிவதுபோல,
சிகரம் - பர்வதம்போல, மால் -
பெரிதாகிய, யானையான் -
யானைகளுக்கதிபனாகிய அவ்வரசன், அத்தேவிமார்
- அந்த
இருதேவியர்களும், புயங்களாக -
கைகளாக, நிகரிலா -
உவமையில்லாத, இன்ப வெள்ளக்கடலிடை -
ஸம்ஸார
சௌக்கியமாகிற பெரிதாகிய ஸமுத்திரத்திலே,
நீந்துநாளுள் -
நீந்துகின்ற காலத்தில், புகரிலார் -
குற்றமில்லாதவர்களாகிய
ஆதித்யாபதேவனும் பவணேந்திர தேவனும், வானின்
வந்து -
தேவருலகத்தினின்றும் ஆயுரவஸானத்து வந்து, இவ்விருவர்க்கும் -
இந்த இரண்டு தேவிமார்களுக்கும், புதல்வரானார்
- புத்திரராகப்
பிறந்தார்கள், எ-று.
(7)
1018. மாலினி தன்க ணாதித் தாபன்மா மேரு வானான்
பாலன மொழிம திக்கட் பவணன்மந் தரனு மாக
வேலையைச் செறிந்த வாழி போற்களி சிறந்து வேந்தன்
ஞாலத்துக் கிடரைத் தீர நடக்குங்கற் பகத்தை யொத்தான்.
(இ-ள்.) மாலினி
தன்கண் - மேருமாலினியென்னும்
தேவியினிடத்தே, ஆதித்தாபன் - ஆதித்யாபதேவன், மா - பெருமை
பொருந்திய, மேருவானான் - மேருவென்னும்
பெயருடைய
புதல்வனாகியவதரித்தான், (அதன்மேல்), பாலன
மொழி -
பால்போலினிமையான வசனத்தையுடைய,
மதிக்கண் -
அமிர்தமதியினிடமாக, பவணன் - தரணேந்திரன் வந்து, மந்தரனுமாக
- மந்தரனென்னுங் குமரனாகப் பிறக்கவும், வேந்தன் - அரசனானவன்,
வேலையைச் செறிந்த - பொங்கிக் கரையில் சேர்ந்த, ஆழிபோல
-
ஸமுத்திரம்போல், களிசிறந்து - சந்தோஷ மதிகரித்து, ஞாலத்துக்கு -
இப்பூமியில் யாசகர்களுக்கு, இடர் - தரித்திர துன்பமானது,
தீர -
நீங்கும்படி, நடக்கும் - செல்கின்ற, கற்பகத்தை - கற்பக விருட்சத்தை,
ஒத்தான் - நிகர்த்தான், எ-று.
‘இடரை" என்பதில், ஐ - சாரியை.
(8)
1019. மங்கையர் கொங்கை யென்னுங் குவட்டினின் றிழிந்து நல்ல
சிங்கப்போ தகங்கள் போலத் தவிசிடைத் தவழ்ந்து சென்று
பங்கயத் தலங்கள் போலும் பவழச்சீ றடியைப் பாரா
மங்கைதன் சென்னி சூட்டி நடந்திட்டார் மாலை யாக.
|