செய்யுந்தன்மையுடையார், வாமம் -
அழகிய, மேகலையினாரே -
மேகலாபரண மணிந்த ஸ்த்ரீகளே (வேறு வசியமில்லை), எ-று. (4)
1015. சினந்தலை நின்ற வேந்தர் திண்புயஞ் சிதைத்த வீரத்
தனந்தவீ ரியனென் பானா மந்நகர்க் கிறைவ னல்லார்
மனந்தொறு மிருந்த காமன் வண்மையான் மாரி யொப்பா
னனந்தலை யுலகி னுள்ள நவையெலாந் தீர நின்றான்.
(இ-ள்.) அந்நகர்க்கு
- அப்பட்டணத்திற்கு, இறைவன் -
அரசனானவன், சினந்தலை நின்ற - கோபத்தில் மிகுதிபெற்று நின்ற,
வேந்தர் - சத்துரு ராஜாக்களுடைய, திண் - கெட்டியாகிய, புயம்
-
புஜபலங்களை யெல்லாம், சிதைத்த -
கெடுத்த, வீரத்து -
பராக்கிரமத்தினால், அனந்த வீரியனென்பானாம்
- அனந்த
வீரியனென்னும் பெயருடையவனாவன், (இவன்),
நல்லார் -
ஸ்த்ரீமார்களுடைய, மனந்தொறும் - மனங்கள் தோறும்,
இருந்த -
இருக்கின்ற, காமன் - மன்மதனுக்கொப்பான
லாவண்யனாவன்,
வண்மையால் - த்யாகம் கொடுக்கின்ற கையின் வளப்பத்தினால், மாரி
யொப்பான் - மேகத்தை யொப்பவனாவான், நனந்தலையுலகின்
-
விசாலித்த இந்த மத்திம லோகத்திலே, உள்ள - இராநின்ற
தனது
ராஜ்யத்தில், நவையெலாம் -
வருத்தங்களெல்லாம், தீர -
நீங்கும்படியாக, நின்றான் - செங்கோலோச்சி
அரசு செலுத்தி
நிலைபெற்றிருந்தான், எ-று. (5)
1016. பாரிசா தத்தைச் சார்ந்த பவழத்தின் கொழுந்தை யொப்பாண்
மேருமா லினியென் பாளவ் வேந்தன்மா தேவி மிக்காள்
வாரிவா யமிர்த மன்னா ளமிர்தமா மதியென் பாளாங்
காரொன்றோ டிரண்டு மின்போற் காவலற் கழுமி நின்றார்.
(இ-ள்.) அவ்வேந்தன்
- அவ்வரசனது, மாதேவி - சிறந்த
பட்டத்தேவிகளாக, மிக்காள் - மிகு குணமுடையவளும், பாரிசாதத்தை
- கற்பக விருட்சத்தை, சார்ந்த - சேர்ந்த, பவழத்தின்
கொழுந்தை
யொப்பாள் - பவழக்கொடிக் கொப்பவளும், (ஆகிய), மேருமாலினி
யென்பாள் - மேருமாலினி யென்பவளும்,
வாரி வாய் -
க்ஷீரஸமுத்திரத்திலுண்டாகிய, அமிர்தமன்னாள் -
அமிர்தத்துக்கு
ஒப்பவளான, அமிர்தமாமதி யென்பாள் -
சிறந்த அமிர்தமதி
யென்பவளும், ஆம் - உண்டாகிய, காரொன்றோடு
- ஒரு
மேகத்தோடு, இரண்டு மின்போல் - இரண்டு மின்னற்
கொடிகள்
சேர்ந்திருக்கின்றதுபோல, காவலன் -
அவ்வரசனை, கழுமி -
பொருந்தி, நின்றார் -
நிலைபெற்றிருந்தார்கள், (அதாவது :
மேருமாலினி முதல் மனைவியாயும், அமிர்தமதி
இரண்டா
மனைவியாயும் அவ்வரசனைச் சேர்ந்திருந்தார்கள்), எ-று.
(6) |