அகழாகிய (அதாவது :
ஜலத்தினால் நிறைந்த காதிகையாகிய)
இரண்டாம் பூமியையும், கண்டார் - பார்த்தார்கள், எ-று. (6)
1054. ஆழமு நிறைவு முண்டே யாகிலு மலையென் பானி
லூழிபேர்ந் தாலும் பேரா விதனைநா னொழிப்ப னென்றிங்
காழிவந் திறைவன் பாத மடைந்துபூம் பட்டை போர்த்துச்
சூழுந்தான் கிடந்த தொத்துத் தோன்றுமிப் பரிகை யென்றார்.
(இ-ள்.)
(அவ்வாறு பார்த்து), இப்பரிகைதான்
- இந்தக்
காதிகையானது, ஆழமும் - ஆழமும், நிறைவும் - ஜலநிறைவும்,
உண்டேயாகிலும் - உண்டாகியும், சூழுகிடந்தது - (ஸமவஸரணத்தின்
இரண்டாம் பிராகாரமாகிச்) சூழ்ந்திருப்பதைப்
பார்த்தால், ஆழி
ஸமுத்திரமானது, இங்குவந்து - இவ்விடம்வந்து, அலையென்பானில் -
அலையென்று சொல்லும்
விதத்தில், ஊழிபேர்ந்தாலும் -
ஊழிஊழிகாலம் அனேகம் நீங்கினாலும், பேரா - நீங்காத, இதனை -
என்னிடமுள்ள இந்த அலையென்பதை, நான் - நான்,
ஒழிப்பனென்று
- ஒழித்து விடுவேனென்று, பூம்பட்டைப் போர்த்து -
புஷ்பங்களாகிற
பட்டுவஸ்திரத்தைப்
போர்த்துக்கொண்டு,
இறைவன்பாதம் -
ஜினேந்திரனது பாதாரவிந்தத்தை, அடைந்ததொத்து
- சேர்ந்ததற்
கொப்பாகி, தோன்றும் - தோன்றாநின்றது,
என்றார் - என்று
சொன்னார்கள், எ-று. (7)
1055. மணிதெளித் தனைய வாரி வாசவான் சுவைய தார்ந்தங்
கணுகுவார்க் காழ்ந்து தோன்றி யடையந்தவர் தாண்மட் டாகிப்
பணிவுயர் விலாது போதிற் பயின்றுபைம் பொன்செய் வீதி
மணியொளி பரந்து வான விற்களாய் மயங்கு நின்றே.
(இ-ள்.) மணி - இந்திர
நீலரத்தினத்தை, தெளித்தனைய -
அரைத்துக் கரைத்துத் தெளியவைத்ததற்குச்
சமானமாகிய, வாரி -
ஜலமானது, வாசம் - பரிமளமாகிய, வான் -
அழகிய, சுவையது -
ரஸமானது, ஆர்ந்து - நிறைந்து,
அங்கு - அவ்விடத்து,
அணுகுவார்க்கு - அடைந்தவர்களுக்கு,
ஆழ்ந்துதோன்றி -
ஆழமாகத் தோன்றி, அடைந்தவர் -
உள்ளே யடைந்தவர்க்கு,
தாண்மட்டாகி - முழந்தாள் பரியந்தமாகி, பணிவு - தாழ்வும்,
உயர்வு
- மேடும், இலாது - இல்லாது சமமாகி, போதில் - புஷ்பங்களினால்,
பயின்று - நிறைந்து, பைம் - பசுமை பொருந்திய,
பொன் செய்
-பொன்னினால் நிருமித்த, வீதி - சதுர் மஹாவீதிகளும்,
மணியொளி
- இரத்தினங்களின் ஒளியானது, பரந்து - வியாபித்து,
வானவிற்களாய்
- இந்திர தனுசுவைப்போல பஞ்சவர்ணமுடையனவாக,
நின்று -
நிலைபெற்று, மயங்கும்
- பார்ப்பவர்களைப்
பிரமிக்கச்
செய்கின்றதாகும், எ-று. (8)
|