1056. காதத்தி னரைய கன்ற காதிகைக் கமல
மாதிப்
போதைக்கொய் தங்கை யேந்திப்
பொன்செய்தோ ரணங்கடந்து
மேதக்க மணியி னாய பாதத்த
வீதி நின்ற
வாதிகோ புரத்தி னாதி நிலையள வாகி யம்பொன்.
(இ-ள்.)
காதத்தின் அரை - அரைக்காதம்,
அகன்ற -
அகலத்தையுடைய, காதிகை - அகழில்
இராநின்ற, கமலமாதி -
தாமரை முதலாகிய, போதை - புஷ்பங்களை, கொய்து - பறித்து,
அங்கை - அழகிய கையினுள், ஏந்தி
- எடுத்துக் கொண்டு,
பொன்செய் - பொன்னால் நிர்மித்தவீதிகளிலுள்ள,
தோரணம் -
தோரணம் முதலானவைகளை யெல்லாம்,
கடந்து - தாண்டி
(அதாவது : இரண்டாம் ப்ராகாரமான காதிகாபூமியின்
விஸ்தீரணமான
இரண்டு குரோச தூரத்தையும் போகி), பாதத்தவீதி
- அவ்விடத்தில்
திக்குவீதிகள் பிரதமத்தில்
சொன்ன இரண்டு
காதத்தில்
நாலத்தொன்று குறைந்த, (அதாவது
: ஒன்றரைக்காத
அகலமுடையதாகிய வீதியில்),
ஆதிகோபுரத்தில் - (இனிமேற்
சொல்லப்போகும்) பிரதம கோபுரமாகிய
உதயதர கோபுரத்தின்,
ஆதிநிலை - முதல் நிலை எவ்வளவு உயரம்
இருக்கின்றதோ
அவ்வளவு, அளவாகி - உன்னதமுடையதாகி, அம் - அழகிய, பொன்
- பொன்னினாலும், மேதக்க - மேன்மை பொருந்திய, மணியின் -
இரத்தினங்களினாலும், ஆய - அமைந்த
கோபுரமானது, நின்ற -
இராநின்றது, எ-று. (9)
1057. பாலிகை முதல வாய பரிச்சந்த முடைய வற்றை
மாலையுஞ் சாந்து மேந்தி வணங்கின ராகிப் போகி
சீலம்போற் செம்பொ னிஞ்சிச் சிலைகளீ ரொன்ப தோங்கி
மாலைபோற் சூழக் காத மகல்வல்லி வனத்தைச் சேர்ந்தார்.
(இ-ள்.) பாலிகை
முதலவாய - பாலிகை முதலாகிய,
பரிச்சந்தம் - பரிவாரங்களை, உடைய - உடைத்தாகிய (அதாவது :
கோபுராங்கமாகிய கும்ப முதலாகிய எல்லா
லக்ஷணங்களையும்
உடைய), அவற்றை - அக்கோபுரங்களையும், செம்பொன் -
சிவந்த
பொன்னாலாகி, சிலைகளீரொன்பதோங்கி
- பதினெட்டு வில்லு
உன்னதமுடையதாகி, சீலம்போல் - சீலாச்சாரம்போல
ஒழுங்காகிய,
இஞ்சி - மதிலையும், மாலையும் - பூமாலை முதலியவும், சாந்தும் -
சந்தனங்களும், ஏந்தி - தரித்து,
வணங்கினராகி - வணக்கம்
செய்தவர்களாகி, போகி - சென்று, மாலைபோல் -
புஷ்பமாலையை
வட்டமாக வைத்ததுபோல, சூழ் - சூழ்ந்திராநின்றதாகிய, (அதாவது :
இப்போது சொன்ன மதிலுக்கு அப்பியந்தர பாகத்தில் உள்ளதாகிய),
காதம் அகல் - ஒருகாத விஸ்தீர்ணமாகிய,
வல்லிவனத்தை -
கொடிப்பூவனமாகிய வல்லி பூமியை,
சேர்ந்தார் - (அவர்கள்)
அடைந்தார்கள், எ-று. (10)
|