பக்கம் எண் :


500மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

 1058. வல்லிமண் டபங்கள் பந்தர் வயிரவா லுகத்த லங்கள்
       வில்லுமிழ்ந் திலங்கும் பூமி விழுந்தபூ வணையின் வீயைப்
       புல்லும்வண் டோசை பூமி தேவனைப் பாடல் போலு
       மெல்லையி லிடங்க ளிவ்வா றியம்புதற் கரிய தொன்றே.

   (இ-ள்.)  வல்லி -  (அந்த   மூன்றாம்   ப்ராகாரமாகிய)  வல்லி
பூமியில்,    மண்டபங்கள்   -   மண்டபங்களும்,   பந்தர்  -  லதா
மண்டபங்களாகிய      பூம்பந்தல்களும்,     வயிரம்   -    வஜ்ர
ரத்தினங்களாலாகிய,    வாலுகம்  - மணல்களையுடைய, தலங்கள் -
தரைகளாகி, வில்  -   கிரணங்களை, உமிழ்ந்து - கக்கி, இலங்கும் -
விளங்குகின்ற,   பூமி -   பூமியிலே, விழுந்த - உதிர்ந்து கிடக்கின்ற,
பூவணையின் -   புஷ்பத்திரள்களில்  உண்டாயிருக்கின்ற,   வீயை -
புதுமலரிலுள்ள     மதுமகரந்தங்களை,    புல்லும்  -   மொய்த்துக்
கொண்டிருக்கின்ற,  வண்டு  -   வண்டுகளின்,   ஓசை  -  ரீங்கார
சப்தமானது,   பூமி  -   அப்பூமியே,   தேவனை  -   ஸ்வாமியை,
பாடல்போலும் -  ஸ்துதிப்பதுபோலு     மாகாநின்றது,    (இன்னும்)
எல்லையில்  -   அளவில்லாத,   இடங்கள்  -   அவ்வல்லிபூமியின்
இடங்களின்விதம்,   இவ்வாறு   -  இந்தப்பிரகாரம்,  இயம்புதற்கு -
வர்ணிப்பதற்கு, அரியது -  அருமையானதாகிய,  ஒன்று - ஒன்றாகும்,
எ-று. (11)

 1059. மல்லிகை முல்லை மௌவன் மாலதி மாத விநற்
      பல்லிதழ் பத்தி பித்தி சண்பகங் குறிஞ்சி வெட்சி
      சொல்லிய பிறவுஞ் செல்விச் சூட்டெனச் செறியப் பூத்த
      வல்லிநன் மலர்க்கை யேந்தி வந்துகோ புரம டைந்தார்.

    (இ-ள்.)   வல்லி  -  அந்த   வல்லி   பூமியில்,  மல்லிகை -
மல்லிகையும்,  முல்லை -   முல்லைப்  பூங்கொடிகளும், மௌவல் -
வனமல்லிகைகளும்,     மாலதி   -  சிறு  சண்பகமும்,  மாதவி  -
குருக்கத்தியும்,  நல் -  நன்றாகிய,   பத்தி - பந்திவரிசைகள், பல் -
பலவாகிய,  இதழ் -   இதழ்களையுடைய,  பித்தி   -  கருமுகையும்,
சண்பகம் - சண்பகமும், குறிஞ்சி - குறிஞ்சியும், வெட்சி - வெட்சியும்,
சொல்லிய -   சொல்லப்பட்ட,    பிறவும்  -    இன்னும்   அனேக
பூங்கொடிகளும்,  செல்வி -   இலக்ஷ்மிதேவியினுடைய,  சூட்டென -
தலைச்சூட்டலங்காரததைப்போல,    செறிய     நெருங்க,   பூத்த -
புஷ்பித்தன,   நன்  -  நன்மையாகிய,   மலர் -  அப்புஷ்பங்களை
கையேந்தி - கையில்  எடுத்துக்கொண்டு, வந்து - வந்து, கோபுரம் -
உதயதாம்  என்கிற  கோபுரத்தை,  அடைந்தார் -  இவ்விருவர்களும்
சேர்ந்தார்கள், எ-று. (12)

 1060. காதமூன் றிரண்டு யர்ந்து காதநீண் டகன்று வாய்தல்
      காதமாய்ச் சிறப்பு மும்மைப் படிமைமுன் னிலைய தாகிச்
      சோதியுட் குளித்து வாய்தல் சோதிடத் தேவர் காப்பப்
      போதரும் பதாகை சூழ்ந்த துதயகோ புரம தாமே.