மஞ்சிலம் பார்க ளாட லறிவன
தெழுச்சி யாதி
யெஞ்சிடா வந்த நாட்டின் பெருமையா ரியம்ப வல்லார்.
(இ-ள்.) ஐஞ்சிறப்பு
- பஞ்ச கல்யாண பூஜையை, அயரும் -
செய்யும், நால்வகைத்தேவர் குழுவோடு - (பவண,
வியந்தர,
ஜோதிஷ்க்க, கல்பவாசியராகிய) நான்குவகைத் தேவ கூட்டங்களோடு,
அம்பொன் - அழகிய பொன்னாலாகிய, இஞ்சி
சூழ்ந்து -
மும்மதில்களால் சூழப்பட்டு, இலங்கும் - விளங்கும், ஏழுநிலம் - சப்த
பூமியையுடைய, இறை - மூன்றுலகிற்கும் நாதனாகிய
அருகத்
பரமேஷ்டி, இருக்கை - தங்குதலையுடைய, வட்டம் - வ்ரத்தமாகிய
சமவசரணம் (அதாவது கோயில்), அம் - அழகிய, சிலம்பார்கள்
-
பாதச் சிலம்புகளையுடைய தேவஸ்த்ரீகளது, ஆடல் - நர்த்தனங்கள்,
அறிவனது - சர்வஞ்ஞனுடைய (அதாவது : அருகத்பரமனுடைய),
எழுச்சி - ஸ்ரீ விஹாரம், ஆதி - முதலாகிய அதிசயங்களால், எஞ்சிடா
- குறையாத, அந்த நாட்டின் - அந்தக் கந்தமாலினி
நாட்டினது,
பெருமை - பெருமையை, யார் - எவர்கள், இயம்ப
- சொல்ல,
வல்லார் - வல்லமையை யுடையவர்கள்? எ-று.
பஞ்சகல்யாணமாவன:- ஸ்வர்க்காவதரணம்,
ஜன்மாபிஷேகம்,
பரிநீஷ்க்கிரமணம், கேவலஞ்ஞானம், பரிநீர்வாணீம் என்பனவாம்.
சப்தபூமி, மும்மதில், ஸ்ரீ : விஹாரம் முதலியவற்றின் விவரங்களை
12-வது 13-வது சருக்கங்களில் பார்த்துக்கொள்க. (8)
9. மணியிலா மலையு மில்லை வனப்பிலா வனமு மில்லை
கணியிலா நிலமு மில்லை கரும்பிலாக் காடு மில்லை
யணியிலா மகளி ரில்லை யழகிலா மைந்த ரில்லை
துணிவிலாத் துறவு மில்லை தூய்திலா வொழுக்க மில்லை.
(இ-ள்.) மணி -
அரதனங்கள், இலா - இல்லாத, மலையும் -
பர்வதமும், இல்லை - (அத்தேசத்தில்) இல்லை, வனப்பு
- அழகு,
இலா - இல்லாத, வனமும் - உத்தியானமும், இல்லை-,
கணி -
மருதநிலம் (விளை நிலம்), இலா - இல்லாத, நிலமும்
- பூமியும்,
இல்லை-, கரும்பிலா - கரும்புகள் விளையாத, நாடும்
- ஊரும்,
இல்லை -, அணி - அழகு, இலா - இல்லாத, மகளீர் - ஸ்திரீகள்,
இல்லை-, அழகிலா - நன்மையில்லாத, மைந்தர் -
புருஷர்கள்,
இல்லை-, துணிவு - திடன் (தெளிவு, நம்பிக்கை), இலா - இல்லாத,
துறவும் -இல்லற நீக்கமும் (அதாவது : தபமும்), இல்லை-, தூய்திலா -
பரிசுத்த மில்லாத, ஒழுக்கம் - சாரித்திரமும், இல்லை-, எ-று. (9)
10. கற்பிலா மகளி ரில்லை கருணையில் லாரு மில்லை
பொற்பிலா வறமு மில்லை போதமில் லாரு மில்லை |