136. கனிந்தநெய்க் கவளங் கையில்
வைத்துடன் கழறு வாரை
முனிந்திடுங் களிறு போல்வார் முத்தியை விளைக்கு நீரார்
மனங்கொளத் துறந்தி டாதே வால்குழைத் தெச்சிற கோடுஞ்
சுணங்கனைப் போலு நீரார் மாற்றிடைச் சுழலு நீரார்.
(இ-ள்.) கனிந்த
- கனிவுபெற்ற, நெய்க்கவனம் - நெய்ச்சோற்றுத்
திரளையை, கையில் - தமது கையில், வைத்து -
வைத்துக்கொண்டு,
உடன் - கூடவிருந்து, கழறுவாரை -
கூவி யழைத்து
இதைத்தின்னக்கடவாயென்று விரும்பும் பாகர்களையும், முனிந்திடும்
-
கோபித்து வெறுக்கின்ற, களிறுபோல்வார் -
யானைக்குச்
சமானமானவர்கள், முத்தியை. மோட்சத்தை, விளைக்கும் -
உண்டு
பண்ணும்படியான, நீரார் - குணத்தையுடையவர்கள்,
மனங்கொள -
மனம் நிறையும்படியாக, துறந்திடாது - விடாமல்,
வால்குழைத்து -
வாலை ஆட்டிக்கொண்டு, எச்சிற்கு -
எச்சிலான அற்ப
அன்னத்துக்குங்கூட, ஓடும் - ஓடுகின்ற,
சுணங்கனைப்போலும் -
நாய்க்குச் சமமாகிய, நீரார் - குணத்தையுடையவர்கள்,
மாற்றிடை -
ஸம்ஸாரத்தில், சுழலும் - சுழலும்படியான, நீரார் -
தன்மையுடையார்,
எ-று. (136)
137. நஞ்சினை யமிர்த மென்றே யுண்டவ னயர்ந்து பின்னைத்
துஞ்சுவ தஞ்சிக் கான்ற நஞ்சையே துய்த்தல்
போலும்
புஞ்சிய பொறியின் போகம் மாற்றிடைச்
சுழற்று மென்னா
வஞ்சிமுன் றுறந்த போகத் தருந்தவ
னாசை தானே.
(இ-ள்.) புஞ்சிய -
சேர்ந்திராநின்ற, பொறியின் -
இந்திரியங்களாலாகிய, போகம் - போகோப போகமானது,
மாற்றிடை
- ஸம்ஸாரத்தில், சுழற்றும் - சுழலப்பண்ணும், என்னா
- என்று,
அஞ்சி - (ஸம்ஸாரச் சுழற்சிக்கு) பயந்து, முன் -
முன்னாலே, துறந்த
- நீக்கிய, போகத்து - அந்தப் போகோப
போகத்தின் மேல்,
(இவ்வாறு ஏற்பட்ட) அருந்தவன் - அரிய
தவத்தையுடைய சயந்த
முனியின், ஆசைதான் - ஆசையானது, (எத்தகையதெனில்),
நஞ்சினை
- விஷத்தை,அமிர்தமென்று - அமுதமென்று நினைத்து,
உண்டவன் -
தின்ற ஒருவன்,அயர்ந்து - வருத்தத்தையடைந்து, துஞ்சுவது
- இறந்து
விடுவதற்கு, அஞ்சி - பயந்து, கான்ற - கக்கிவிட்ட,
நஞ்சையே -
அந்த
விஷத்தையே, பின்னை - மறுபடியும்,
துய்த்தல்போலும் - உண்ணுதலை
நிகர்க்கும், எ-று.
(137)
138. ஐந்தலை யரவந் தன்வா யைந்துடன்
கலந்த நஞ்சிற்
றுன்பமோர் கடிகை யல்லாற் றுஞ்சினாற்றொடர்ந்தி
டாதா
மைம்பொறி யரவந் தன்வா யொன்றினா லாய நஞ்சு
துஞ்சினா லநேக காலந் தொடர்ந்துநின்றடுங்கள்
கண்டீர்.
|