பக்கம் எண் :


66மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  ஐந்தலை   -   ஐந்து   கிரசையுடைய,    அரவம்  -
ஸர்ப்பமானது, தன் வாய் ஐந்துடன் - தன்னுடைய ஐந்துவாயினாலும்,
கலந்த - (கடித்துச்) சேர்ந்த, நஞ்சின் - விஷத்தினாலாகிய, துன்பம் -
துயரமானது, ஓர் கடிகையல்லால் - ஒரு நாழிகையேயிருக்குமல்லாமல்,
துஞ்சினால் -  இறந்து  விட்டால்,  தொடர்ந்திடாதாம்  - அதன்மேல்
சேர்ந்து வருத்தாதாம், ஐம்பொறி - பஞ்சேந்திரிய விஷவாஞ்சையாகிற,
அரவந்தன்  -  ஸர்ப்பத்தினது, வாயொன்றினால்  - ஒருவாயினாலே,
ஆய  -  உண்டாகிய,  நஞ்சு  -  விஷமானது,  துஞ்சினால் - சரீரம்
நீங்கினாலும்,   (தான்   நீங்காமல்)   அநேககாலம்  - நெடுங்காலம்
(அதாவது :   கர்ம   ஸ்திதிகாலபரியந்தம்),   தொடர்ந்து  நின்று  -
ஆத்மனிடத்தில் ஸத்துவத்தில் நின்று, அடும் -துன்பத்தைச் செய்யும்,
எ-று.
               கள்,கண்டீர் என்பன அசைகள். (138)

 139. காட்சியைக் கலக்கி ஞானக் கதிர்ப்பினைத் திரித்துப புக்கான்
     மீட்சியி லுலக மேற்று மொழுக்கத்தை யழித்து வைய
     மாட்சிபெற் றவனை வைய மதனுக்கே யடிமை யாக்கு
     மாட்சித்தா னிதானந் தன்னை மனங்கொள்ளார் மதியின் மிக்கார்.

    (இ-ள்.)  காட்சியை - ஸம்மியக்தர்சனத்தை, கலக்கி - சிதைத்து,
ஞானம் - ஸம்மியக்ஞானமாகிற, கதிர்ப்பினை, பிரகாசத்தை, திரித்து -
கெடுத்து,    மீட்சியில்    -    திரும்புதலில்லாத,     உலகம்    -
ஸித்திக்ஷேத்திரத்தில்,   ஏற்றும்  -    உயர்த்திச்சேர்க்கும்  படியான,
ஒழுக்கத்தை  -   சம்மியக்சாரித்திரத்தையும்,  அழித்து  -  கெடுத்து,
புக்கான் -  (சயந்தமுனி)  நிதானசல்லியத்தால் பவணலோகஞ்சேர்ந்து
தரணேந்திரனானான்,     வையம் -  இந்த  உலகத்தில்,  ஆட்சி  -
(நிதானசல்லியத்தால்)   அதன்   ஆளுகையை,   பெற்றவனை    -
அடைந்தவனை,  வையம் - இந்தவுலகமானது, அதனுக்கு - அதற்கே,
அடிமையாக்கும்    -    அடிமையாகச்செய்யும்,    மாட்சித்து    -
மாட்சிமையையுடையது,   (ஆதலால்)   நிதானந்தன்னை   -  நிதான
சல்லியமாகிற   தோஷத்தை,  மதியின்  மிக்கார் - புத்தியிற்  சிறந்த
பெரியோர்கள், மனங்கொள்ளார் - மனதிலே    கொள்ளமாட்டார்கள்.
எ-று.
            
         மாட்சித்தால் என்பதில், ஆல் - அசை. (139)

 140. ஒழிந்தநால் வினையும் வென்றிட்டுலகொரு மூன்று மேத்த      வெழுந்துசென் றுலகத் துச்சி யெய்தினான் வைச யந்த
     னழுந்திய நிதானத் தாலே சயந்தனவ் வமர னாய்க்கீழ்
    விழுந்தன னொழிந்த வீரன் சரிதையான் விளம்பலுற்றேன்.

     (இ-ள்.)   ஒழிந்த   -     மீதியாகிய,    நால்வினையும்   -
(அகாதிகருமங்களாகிய      வேதநீயம்,     ஆயுஷ்யம்,     நாமம்,
கோத்திரமென்னும் நாலுவிதமான) கருமங்களையும்,