வேறு.
147. வித்துத் தந்த னென்பவன் விச்சா தரவேந்தன்
மத்தத் தந்தி போல்பவன் வானம் வழியாக
முத்தத் தந்த மொய்குழற் சாமை யொடுசெல்வான்
சித்தத் தந்த மின்றி நின்றவன் மேற்சென்றான்.
(இ-ள்.)வித்துத்தந்த னென்பவன் - 1வித்யுத்தம்ஷ்ட்ரன்
என்னும்
பெயரையுடையவனாகிய, விச்சாதரவேந்தன் - வித்தியாதரவரசன்,
மத்தம் - மதம் பொருந்திய, தந்திபோல்பவன் - யானைக்குச்
சமானமாகியவன், முத்தம் - முத்துப்போன்ற, தந்தம் -
பற்களையுடைய, மொய் - நெருங்கிய, குழல் - அளகத்தையுடைய,
சாமையொடு - தனது தேவியாகிய சியாமையுடன், வானம் வழியாக -
ஆகாயமார்க்கமாக, செல்வான் - விமானாரூடனாகிச் செல்பவன்,
சித்தத்து - மனதில், அந்தமின்றி - இருளின்றி (அதாவது :
ராகாதிகளின்றி), நின்றவன் மேல் - யோகத்தில் பொருந்திநின்ற
சஞ்சயந்த முனியின் மேலாக, சென்றான் - போயினான், எ-று. (7)
148. மண்மே னின்ற மாதவர் கோன்மீ தோடாதாய்
விண்மே னின்ற விமானங் கண்டு வியப்பெய்திப்
புண்மேல் வேலா லேறுண் டான்போற் புகைந்தாற்றான்
கண்மேற் கண்டான் கைவல செல்விக் கணியானை.
(இ-ள்.) மண்மேல் - பூமியின்மேல், நின்ற - யோகத்தில்
பொருந்திநின்ற, மாதவர்கோன்மீது - மஹா தபஸையுடைய
முனிவர்களுக்கெல்லாம் முதல்வனாகிய இச்சஞ்சயந்த முனியின்
மேலாக, ஓடாதாய் - செல்லாததாகி, விண்மேல் - ஆகாயத்தில், நின்ற
- நிற்கப்பட்ட, விமானம் - தனது விமானத்தை, கண்டு - பார்த்து,
வியப்பெய்தி - ஆச்சரியமடைந்து, கைவலசெல்விக்கு - கேவல
ஞானமாகிய இலக்ஷ்மிக்கு, அணியானை - அழகு செய்பவனாகிய
தலைவனாகும் தன்மையையுடைய இம் முனியை, கண்மேல் - தனது
கண் முன்பாக, கண்டான் - பார்த்த அவன், புண்மேல் - இரணத்தின்
மேல், வேலால் - வேலாயுதத்தால், ஏறுண்டான்போல் - அடிபட்டவன்
போல், புகைந்து - கோபித்து, ஆற்றான் - பொறாதவனானான்,
எ-று. (8)
149. காணா நின்ற வேரங் கனற்றக் கடிதோடி
மாணா னேந்தி மாதவர் கோனைக் கொடுவந்து
சேணா றோடும் விமான மேற்றிச் செல்கென்றான்
வேணார் வெள்ளி மாலையி னிவட்கீழ்ப் பரதத்தே.
____________________________________________
1ஜொலிக்கும்
பற்களையுடையவன்; காரணப் பெயர். |