மற்ற தன்கரை மச்ச லிங்கம்என் றற்றம் இல்அரி அருச்சித் துள்ளது துற்ற பாதகச் சோம காசுரன் கற்கும் மாமறை கவர்ந்தொ ளித்தநாள். 3 | அடுக்கிய பெரும்பாவச் செயல்களைப் புரிகின்ற சோமகாசுரன் கற்கவும் அவற்றின் வழி நிற்கவும் வேண்டிய பெருமறைகளை வௌவிக் கொண் டொளித்த நாளில் குற்றமின்றித் தாங்கும் திருமால் அத்தீர்த்தக் கரையில் அருச்சித்த மச்சலிங்கம் விளங்கும் இயல்பினது. ஓத்தொ ழிந்தன உலகம் யாவையும் நீத்த வேள்விய நிலைமை குன்றலான் தீத்தெ றும்பசித் தேவர் மாயனைச் சோத்து நீசரண் எனத்து தித்தனர். 4 | உலகோர் வேதம் ஓதுதல் தவிர்ந்தனர். வேதம் ஓதுவோர் இயல்பு கெட்டமையால் வேள்விகள் நிகழ்ந்தில. தீயைப்போலச் சுடும் பசியால் வாடிய தேவர் திருமாலைச் ‘சோத்து நீ அடைக்கலம்’ எனத் துதி செய்தனர். சோத்து - இழிந்தோர் செய்யும் அஞ்சலி (சத்ததானப்படலம் 1, வாணேசப்படலம் 76லும் காண்க) அவிபெறாமையால் தேவர் வருந்தினர். அஞ்ச லீரென அருளி அச்சுதன் நெஞ்ச கத்துற நினைவின் நாடினான் எஞ்சு றாமறை யாவுங் கைக்கொடு வஞ்சன் ஆழியுள் மறைந்த வண்ணமே. 5 | ‘அஞ்சன்மின்’ என அருள் செய்து திருமால் நெஞ்சில் தோன்றும் படி குறையாத மறைகளை முற்றவுங் கைப்படுத்து வஞ்சநெஞ்சினன் கடலுள் மறைந்த அந்நிலையை அறிவால் ஆராய்ந்து கண்டனர். பிருகு மாமுனி சபித்த பெற்றியால் ஒருவ ருங்கயல் உருவு தாங்குபு மரும லர்ப்பொழிற் காஞ்சி வைப்பிடைப் பொருவில் இப்பிநீர்ப் புடையில் நண்ணினான். 6 | பிருகு மாமுனிவர் சாபம் தந்தமையால் விலக்கரிய மச்ச வடிவினைத் தாங்கி மண மலர்களைக்கொண்ட சோலை சூழ் காஞ்சிமாநகர்க்கண் ஒப்பில்லாத இப்பி தீர்த்த மருங்கில் நெருங்கினார். மேற்படி வேறு சலங்கொள் மீன்உருத் தன்பெயர் நாட்டிஅங் கிலிங்கம் அன்பின் இருத்தி அருச்சனை துலங்கச் செய்தருள் பெற்றுத் தொகுநிதிக் கலங்கள் மல்கு கடலகத் தெய்தினான். 7 | |