பக்கம் எண் :


100புலவர் குழந்தை

   
காலம் - அறுசீர் விருத்தம்
           49.     அமைதிரு வள்ளு வத்தீ ராயிரத் திருபான் மூன்றில்
                  இமையுமா யிரத்துத் தொள்ளா யிரத்தொடு நாற்பத் தாறில்
                  அமைவுறக் குழந்தை நன்காய்ந் தருந்தனித் தமிழ்ப்பா வாக்கக்
                  கமையுறு தமிழர் மேலோன் காவியஞ் சமைந்த வாறே.
 
நூற்பயன்
 
           50.     தந்நிலை யுணர்ந்து வாய்மைத் தமிழர்க ளடிமை வாழ்வாம்
                  இந்நிலை தவிர்ந்து முன்ன ரிழந்தத முரிமை யெய்தி
                  முன்னிலை யடைந்து வாழு முறையொடு வாழ்வர் வீரக்
                  கன்னிலை நின்ற மேலோன் காவியம் பயிலு வோரே.
------------------------------------------------------------------------------------------
           49. இமையும் - நிகழும். கமை - பொறுமை. திருவள்ளுவம் -
வள்ளுவராண்டு. இருபான் மூன்று இல் ஈராயிரத்து - 1977. அறுசீர் விருத்தம் - அறுசீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம். இவ்வாறே எழுசீர், எண்சீர்விருத்தம் எனவுங் கொள்க.