பக்கம் எண் :


116புலவர் குழந்தை

   
         3.       அரசி யன்முத லாகிய
                 துரிசி லாது துலங்கவே
                 வரிசை யாக வகுத்துரை
                 பரிசு காணிவர் பண்பரோ.

         4.       ஐவ கைத்துன் பகற்றியே
                 உய்வ கைத்துயி ருற்றிட
                 கைவ லத்தினிற் காப்பவர்
                 மெய்வ கைத்தமிழ் வேந்தரே.

         5.      நீரி னுந்நன் னிலத்தினும்
                 கூரு கொண்டு கொடுத்துமே
                 ஈரி ரும்பொரு ளீட்டுவோர்
                 மாரி வண்கை வணிகரே.

         6.      மேழி யானில மேவுயிர்
                 சூழ வுண்டு தொகுபசி
                 வீழ வுண்டு விளைக்குவோர்
                 ஆழி மொய்ம்பின்வே ளாளரே.

         7.       களவு முற்றிய கற்பினர்
                 அளவ றிந்தற மாற்றிட
                 உளம றிந்தவர்க் கோதுவோர்
                 பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.

         8.       மற்று முள்ள வகுப்பெலாம்
                 உற்ற வாழ்வுக் குறுதுணை
                 யிற்றொ ழிலினி யன்றதாற்
                 பெற்ற னதொழிற் பேரரோ.

         9.       முதலில் வெம்பசி மூளவே
                 அதனை நீக்குண வாக்கவே
                 முதன்மு தலின முன்னர்செய்
                 ததுப யிர்த்தொழி லாகுமே.

------------------------------------------------------------------------------------------
         3. துரிசு - குற்றம். 4. ஐவகைத்துன்பம் - தன்னால், அலுவலரால், பகைவரால்,
கல்வரால், பிற உயிரால் வருவன. நோய்தரும் நச்சுப் புழுக்களும் அடங்கும். 5. கூர் -
மிக. கொண்டு கொடுத்தல் - வணிகம். ஈர்இரும் - நனிமிக. 6. ஆழி - தேருருள்.
மொய்ம்பு - வலி. 7. பளகு - குற்றம்.