பக்கம் எண் :

பக்கம் எண் :70

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல் - அழகிய சிவந்தசாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமண் பள்ளியில், ஓர் விஞ்சையன் இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென் பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங் கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமண முனிவர் வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன் ஈண்டு எய்திய காரணத்தைக் கூறு வாயாக என ;

சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல் ; மனத்தை நிறுத்தலுமாம் ; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி; 1 "நீர் மிகிற் சிறையுமில்லை" 2 "நீர்மிகி னில்லை சிறை" 3 "சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்குமாயின்" 4 "பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள், சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென, விகாரம், அவ்வியம்-பிறர்க்குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம். அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை காண்க.

28--31. வார் கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி - நீண்ட வீரக்கழலை யணிந்த அரசே நின் கண்ணி வாழ்வதாக, தீநெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-தீயவழியிற் செல்லாத உள்ளமுடையை ஆவாயாக, ஈங்கிவள் தன்னோடு எய்திய காரணம் வீங்குநீர்ஞாலம் ஆள்வோய் கேட்டருள்-இம் மணிமேகலையுடன் யான் வந்த காரணத்தைக் கடல்சூழ்ந்த நிலவுலகினையாளும் மன்னவனே கேட்டருள் வாயாக ;

32--40. யாப்புடை உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும் உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட் டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன் - மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால் பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி, தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப் பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண் நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ;


1 புறம். 51. 2 பழ.190. 3 சூளா. கல்யாண. 155. 4 குறுந். 17