|
கணவிர மாலை யிடூஉக்கழிந் தன்னை,
புண்ணுமிழ் குருதி பரிப்பக் கிடந் தோர்" என உவமங் கூறியிருப்பது அறியற்பாலது.
இடமென்று-இட மாகலின் புரந்தருறள்வரென்று.
53--57. இவண்
நீர் அல்ல என்று என்னொடும் வெகுண்டு - இவ் விடத்திற்குரிய தன்மை அன்றென்று
கூறி என்னையும் சினந்து, மையறு படிவத்து மாதவர் புறத்து எமைக் கையுதிர்க்
கோடலின்- குற்றமற்ற தவவடிவத்தையுடைய சமண முனிவர்கள் புறத்தே போகுமாறு
எம்மைக் கையை அசைத்துக் குறித்தலினால், கண் நிறை நீரேம்-கண்களில் நிறைந்த
நீரினையுடையேமாய், அறவோர் உளீரோ ஆரும் இலோம் என - அறம்புரிவீர் இருக்கின்றீரோ
பாதுகாப்போர் யாருமில்லாதேம் என்று, புறவோர் வீதியில் புலம் பொடு சாற்ற
- புறத்திலுள்ள ஒரு வீதியில் வருத்தத்துடன் கூற ;
இவணீரல்ல - இவ்விடத்திற்குரியீரல்லீர் என்றுமாம்
; அல்ல என்பது பால்குறியாது வழக்குப்பற்றி நின்றது. என்னொடும் - என்னையும்
; உம்மை : எச்சம் ; தந்தையை என்னொடும் என்றுமாம். படிவம் - தவ வேடம்.
ஓர் புறவீதியி லென்க ; புறவோர் - புறத்திலுள்ளோர் என்றுரைப்பாருமுளர்.
58--70. மங்குல்
தோய் மாட மனைதொறும் புகூஉம் அங்கையிற் கொண்ட பாத்திரம் உடையோன்
- வானளாவிய மாடங்களையுடைய மனைகள்தோறும் செல்லும் கையிற்கொண்ட பிச்சைப்
பாத்திரத்தையுடையவனும், கதிர்சுடும் அமயத்துப் பனிமதி முகத்தோன்-ஞாயிறு
காயும் நண்பகற் பொழுதில் குளிர்ச்சி பொருந்திய மதிபோலும் முகத்தினையுடையவனும்,
பொன்னில் திகழும் பொலம்பூ ஆடையன்-பொன்போல் விளங்கும் அழகிய ஆடையை
உடையவனுமாகி, என் உற்றனிரோ என்று எமை நோக்கி-என்ன துன்பம் எய்தினீர்
என்று எங்களை நோக்கி, அன்புடன் அளைஇய அருள்மொழி அதனால் - அன்பொடு
கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், அஞ்செவி நிறைத்து நெஞ்சகம் குளிர்ப்பித்து-
செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்து, தன்கைப் பாத்திரம் என்கைத்
தந்து-தன் கையிலுள்ள பாத்திரத்தை என் கையில் கொடுத்துவிட்டு, எந்தைக்கு
உற்ற இடும்பை நீங்க - என் தந்தைக்கு எய்திய துன்பம் நீங்குமாறு, எடுத்தனன்
தழீஇக் கடுப்பத் தலையேற்றி-விரையத் தழுவி எடுத்துத் தன் உடம்பினிடத்தே
சுமந்து சென்று, மாதவர் உறைவிடம் காட்டிய மறையோன்-புத்த முனிவர்கள் உறைவிடத்தைக்
காட்டிய மறையவனாகிய, சாதுயர் நீக்கிய தலைவன்-எந்தையின் இறப்புத் துன்பத்தை
நீக்கிக் காப்பாற்றிய தலைவன், தவமுனி சங்கதருமன் - சங்கதருமன் என்னும்
தவத்தையுடைய முனிவனாவான் ;
|