பக்கம் எண் :

பக்கம் எண் :80

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 

என்று நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அத்தேவரனைவரும் சம்பாபதிகூறிய வாறே கூறினர் ; அதனைக் கேட்டு உண்மை யறிந்து ஒருவாறு வருத்த மொழிந்த கோதமை மகனைப் புறங்காட்டிலிட்டு இறந்து போயினள்.

பின்பு அறிகின்பு சம்பாபதியின் ஆற்றலை யாவர்க்கும் புலப்படுத்தல்வேண்டி, எல்லாத் தேவர்களும் கூடியவிடத்து அவர்கள் கூடியதற்குறியாக, உலகின் நடுவேயுள்ள மேருமலையும், அதனைச்சூழ்ந்த எழுவகைக் குன்றங்களும் நான்கு பெருந்தீவுகளும், இரண்டாயிரம் சிறு தீவுகளும், ஏனைய இட வகைகளும் ஆகிய இவற்றைப் புலப்படுத்தி, ஆங்காங்கு வாழும் உயிர்களையும் மண்ணீட்டினால் வகுத்து மயனால் நிருமிக்கப்பட்ட தாகலின் சக்கரவாளக் கோட்டமெனப் பெயர்பெற்றது; இது சுடுகாட்டைச் சூழ்ந்த மதிற்புறத்துள்ளதாகலின் ''சுடுகாட்டுக்கோட்ட''மென்று யாவரானும் கூறப்படும்; இதன் வரலாறு இதுவாகும்" என்றுரைக்கக் கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை ''மக்கள் வாழ்க்கை இத்தகையது,'' என இரங்கிக்கூறி யிருக்கையில், சுதமதி தூங்குதலுற்றனள். அப்பொழுது மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவி யெடுத்து, ஆகாயவழியே முப்பது யோசனை தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணி பல்லவம் என்னும் தீவில் அவளை வைத்தகன்றது. (இதில் புகார நகரின் புறங்காட்டினியல்புகளும், அக்காலத்தில் இறந்தோரை அடக்கஞ் செய்யுமுறைகளும் கூறியிருப்பன சிறப்பாக அறியத் தக்கவை.)]
 






5





10





15

அந்தி மாலை நீங்கிய பின்னர்
வந்து தோன்றிய மலர்கதிர் மண்டிலம்
சான்றோர் தங்கண் எய்திய குற்றம்
தோன்றுவழி விளங்குந் தோற்றம் போல
மாசறு விசும்பின் மறுநிறங் கிளர

ஆசற விளங்கிய வந்தீந் தண்கதிர்
வெள்ளிவெண் குடத்துப் பால்சொரி வதுபோல்
கள்ளவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய
உருவு கொண்ட மின்னே போலத்
திருவி லிட்டுத் திகழ்தரு மேனியள்

ஆதி முதல்வன் அறவாழி யாள்வோன்
பாத பீடிகை பணிந்தன ளேத்திப்
பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகிச்
சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி
ஈங்கு நின்றீர் என்னுற் றீரென

ஆங்கவ ளாங்கவன் கூறிய துரைத்தலும்