பக்கம் எண் :

பக்கம் எண் :82

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 






55





60





65





70





75





80

தலைதூங்கு நெடுமரந் தாழ்ந்துபுறஞ் சுற்றிப்
பீடிகை யோங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டமும்
அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்

நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கிற் சிறந்தோர் செய்த
குறியவு நெடியவுங் குன்றுகண் டன்ன
சுடும ணோங்கிய நெடுநிலைக் கோட்டமும
அருந்திறற் கட்வுட் டிருந்துபலிக் கந்தமும்

நிறைக்கற் றெற்றியும் மிறைக்களச் சந்தியும்
தண்டு மண்டையும் பிடித்துக் காவலர்
உண்டுகண் படுக்கும் உறையுட் குடிகையும்
தூமக் கொடியுஞ் சுடர்த்தோ ரணங்களும்
ஈமப் பந்தரும் யாங்கணும் பரந்து

சுடுவோ ரிடுவோர் தொடுகுழிப் படுப்போர்
தாழ்வயி னடைப்போர் தாழியிற் கவிப்போர்
இரவும் பகலும் இளிவுடன் றரியாது
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும்
எஞ்சியோர் மருங்கின் ஈமஞ் சாற்றி

நெஞ்சு நடுக்குறூஉம் நெய்த லோசையும்
துறவோ ரிறந்த தொழுவிளிப் பூசலும்
பிறவோ ரிறந்த அழுவிளிப் பூசலும்
நீண்முக நரியின் தீவிளிக் கூவும்
சாவோர்ப் பயிருங் கூகையின் குரலும்

புலவூண் பொருந்திய குராலின் குரலும்
ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும்
நன்னீர்ப் புணரி நளிகட லோதையின்
இன்னா இசையொலி என்றுநின் றறாது
தான்றியும் ஒடுவையும் உழிஞ்சிலு மோங்கிக்

கான்றையுஞ் சூரையுங் கள்ளியு மடர்ந்து
காய்பசிக் கடும்பேய் கணங்கொண் டீண்டும்
மாலமர் பெருஞ்சினை வாகை மன்றமும்
வெண்ணிணந் தடியொடு மாந்தி மகிழ்சிறந்து